ETV Bharat / city

கருணாநிதிக்கு பேனா வடிவ சிலை விவகாரம்: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

author img

By

Published : Jul 25, 2022, 8:15 AM IST

Updated : Jul 25, 2022, 10:50 AM IST

கடலில் கருணாநிதிக்கு பேனா வடிவ சிலை அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல் தரப்பில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே சரியான திட்டமிடுதலுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கடலுக்கடியில் கலைஞர் பேனா அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தரப்பு அனுமதி- அமைச்சர் ஏ.வ.வேலு
கடலுக்கடியில் கலைஞர் பேனா அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தரப்பு அனுமதி- அமைச்சர் ஏ.வ.வேலு

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீனஸ் நகர் மெயின் ரோட்டிற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை நேற்று (ஜூலை 24) பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் சென்னை எழும்பூர் ஈ.வே.ரா சாலையில் நடைபெற்று வரும் இணைப்பு கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சென்னை வால்டாக்ஸி சாலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பெத்தனாயக்கன் சாலை வரையிலான சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை  அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீனஸ் நகர் மெயின் ரோட்டிற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை பொதுப்பணிகளை நாங்கள் இன்று ஆய்வு செய்தோம். 80% பணிகள் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்குள் இப்பணிகள் முழுவதும் நிறைவடையும்.

மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள்: கொளத்தூர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் தணிகாச்சலம் கால்வாய் வழியாக கொடுங்கையூர் கால்வாயினை சென்றடையும் வகையில், உள்வட்ட சாலையின் வலதுபுறத்தில் பெரிய மழைநீர் வடிகால் 250 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.

சென்னை வால்டாக்ஸி சாலையில், மழைநீர் தேங்காத வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பெத்தனாயக்கன் சாலை வரையிலான சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளை நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் 70 முதல் 80% பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் மழை காலத்திற்கு முன்பாகவே சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் சிருபாலங்கள் அமைக்கும் பணிகள் முழுவதும் நிறைவடையும்.

கடலில் கலைஞருக்கு பேனா அமைக்கும் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் தரப்பில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. சரியான திட்டமிடுதலுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு செய்வது என்பது மக்களுக்கு செய்யும் நன்றிக்கடன். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து முதலமைச்சர்களை காட்டிலும், மக்கள் பயன்பெறும் வகையில் அதிகமான ஆணைகளை வழங்கிய ஒரே தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் என்றார்.

இதையும் படிங்க: திராவிட மாடல் திட்டம் என்றாலே.. தூத்துக்குடியில் பாஜக வழக்கறிஞர் சாடல்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீனஸ் நகர் மெயின் ரோட்டிற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை நேற்று (ஜூலை 24) பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் சென்னை எழும்பூர் ஈ.வே.ரா சாலையில் நடைபெற்று வரும் இணைப்பு கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சென்னை வால்டாக்ஸி சாலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பெத்தனாயக்கன் சாலை வரையிலான சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை  அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீனஸ் நகர் மெயின் ரோட்டிற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை பொதுப்பணிகளை நாங்கள் இன்று ஆய்வு செய்தோம். 80% பணிகள் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்குள் இப்பணிகள் முழுவதும் நிறைவடையும்.

மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள்: கொளத்தூர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் தணிகாச்சலம் கால்வாய் வழியாக கொடுங்கையூர் கால்வாயினை சென்றடையும் வகையில், உள்வட்ட சாலையின் வலதுபுறத்தில் பெரிய மழைநீர் வடிகால் 250 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.

சென்னை வால்டாக்ஸி சாலையில், மழைநீர் தேங்காத வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பெத்தனாயக்கன் சாலை வரையிலான சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளை நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் 70 முதல் 80% பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் மழை காலத்திற்கு முன்பாகவே சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் சிருபாலங்கள் அமைக்கும் பணிகள் முழுவதும் நிறைவடையும்.

கடலில் கலைஞருக்கு பேனா அமைக்கும் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் தரப்பில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. சரியான திட்டமிடுதலுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு செய்வது என்பது மக்களுக்கு செய்யும் நன்றிக்கடன். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து முதலமைச்சர்களை காட்டிலும், மக்கள் பயன்பெறும் வகையில் அதிகமான ஆணைகளை வழங்கிய ஒரே தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் என்றார்.

இதையும் படிங்க: திராவிட மாடல் திட்டம் என்றாலே.. தூத்துக்குடியில் பாஜக வழக்கறிஞர் சாடல்

Last Updated : Jul 25, 2022, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.