ETV Bharat / city

ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒன்றாக குரல் கொடுத்தனர் - ஸ்டாலின்

வேலூர்: முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தனர் என்று, வேலூர் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

author img

By

Published : Aug 2, 2019, 6:06 AM IST

Updated : Aug 2, 2019, 6:36 AM IST

தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆம்பூரில் தேர்தல் பிரச்சாரம்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

இத்தேர்தல் முடிவடைந்திருக்க கூடிய தேர்தலாகும், வேண்டுமென்றே வீண் பழி சுமத்தி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த எதிர்கட்சியினர் செய்த செயலால் தடைபட்டு தற்போது நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க 38 குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்கின்றன, அதனுடன் சேர்த்து கதிர் ஆனந்தின் குரலையும் தமிழ்நாட்டிற்கு ஆதரவு குரலாக மாற்ற நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

நீட் விலக்கப்படும் என கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூறினார்கள் ஆனால் இன்றைய ஆட்சியில் நீட் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அனிதா, கீர்த்தனா ஆகிய குழந்தைகளின் இறப்புக்கு காரணமாகவும் இந்த ஆட்சியுள்ளது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

இத்தேர்தல் முடிவடைந்திருக்க கூடிய தேர்தலாகும், வேண்டுமென்றே வீண் பழி சுமத்தி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த எதிர்கட்சியினர் செய்த செயலால் தடைபட்டு தற்போது நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க 38 குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்கின்றன, அதனுடன் சேர்த்து கதிர் ஆனந்தின் குரலையும் தமிழ்நாட்டிற்கு ஆதரவு குரலாக மாற்ற நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

நீட் விலக்கப்படும் என கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூறினார்கள் ஆனால் இன்றைய ஆட்சியில் நீட் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அனிதா, கீர்த்தனா ஆகிய குழந்தைகளின் இறப்புக்கு காரணமாகவும் இந்த ஆட்சியுள்ளது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Intro:

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம்.


Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தல் இறுதி நிலையை அடையும் நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இன்று ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் அவர் பேசியதாவது.

இத்தேர்தல் கடந்த தேர்தலுடன் முடிவடைந்து இருக்க வேண்டும் வேண்டும்மென்றே வீண் பழி சுமத்தி கட்சியிற்கு கலக்கம் ஏற்படுத்த எதிர் கட்சியினர் செய்த செயலால் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் தமிழகத்தின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க 38 குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்கின்றன அதனுடன் சேர்த்து கதிர் ஆனந்தின் குரலையும் தமிழகத்திற்கு ஆதரவு குரலாக மாற்ற நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

மேலும் பேசிய அவர் இந்த ஆட்சி ஆட்சியல்ல வெறும் காட்சி இது எடப்பாடி ஆட்சியல்ல எடுபுடியின் ஆட்சி என்று விமர்சித்தார்.

மேலும் பாஜகவிற்கு கைகூலியாக விளங்கும் ஆட்சி இன்றைய ஆட்சி.

நீட் விளக்கப்படும் என கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூறினார்கள் ஆனால் இன்றைய ஆட்சியில் நீட் கொண்டுவந்தது மட்டுமில்லாமல் அனிதா என்ற பெண்ணும் தற்போது கீர்த்தனா என்ற பெண் இறப்பதற்கு காரணமாக இந்த ஆட்சியுள்ளது.


Conclusion: எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.
Last Updated : Aug 2, 2019, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.