ETV Bharat / city

குடியுரிமைச் சட்டத்தால் நாடே பாதிக்கும் - கனிமொழி எச்சரிக்கை

author img

By

Published : Feb 8, 2020, 2:38 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இசுலாமியர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.

kanimozhi
kanimozhi

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். பின்னர் மேடையில் பேசிய கனிமொழி, ” ஒரு போர்க்கால அவசரத்தில் இந்தக் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி படிக்கக்கூட நேரம் அளிக்காமல் இச்சட்டத்தை நிறைவேற்றினர். இந்தியாவில் வரலாறு காணாத அளவில் வேலையின்மை, ஜிடிபி சரிவு உள்ளிட்ட பிரச்சனைகளில், மோசமான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், நாட்டிலுள்ள அன்றாடப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசைத் திருப்பும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தால், இப்போது இதற்காக போராட வேண்டிய சூழலே இருந்திருக்காது
அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தால், இப்போது இதற்காக போராட வேண்டிய சூழலே இருந்திருக்காது

மாநிலங்களவையில் அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தால், இப்போது இதற்காக போராட வேண்டிய சூழலே இருந்திருக்காது.

மாணவர்கள் உட்பட அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜக எம்.பிக்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் யாரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறியதோ, அவரைக் குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலுரை வழங்கும் நபராக மத்திய அரசு தேர்ந்தெடுக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயம் மட்டுமே தெரியும், ஒன்று பாகிஸ்தான், இன்னொன்று நேரு. மற்ற எதைப்பற்றியும் அவர் பேசுவதில்லை.

ஆண்களை விட பெண்கள்தான் இந்தக் குடியுரிமை சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கனிமொழி

குடியுரிமைச் சட்டத்தோடு இது நின்றுவிடப் போவதில்லை. அடுத்து குடியுரிமைப் பதிவேடு கொண்டு வர உள்ளனர்.

எனவே, இது இஸ்லாமியர்களுக்கான பாதிப்பு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இதன்மூலம் பாதிக்கப்படுவர். ஆண்களை விட பெண்கள்தான் இந்தக் குடியுரிமை சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர் “ என்றார்.

இதையும் படிங்க: மோடி பேச்சு அரசு பதிவேட்டிலிருந்து நீக்கம்

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். பின்னர் மேடையில் பேசிய கனிமொழி, ” ஒரு போர்க்கால அவசரத்தில் இந்தக் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி படிக்கக்கூட நேரம் அளிக்காமல் இச்சட்டத்தை நிறைவேற்றினர். இந்தியாவில் வரலாறு காணாத அளவில் வேலையின்மை, ஜிடிபி சரிவு உள்ளிட்ட பிரச்சனைகளில், மோசமான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், நாட்டிலுள்ள அன்றாடப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசைத் திருப்பும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தால், இப்போது இதற்காக போராட வேண்டிய சூழலே இருந்திருக்காது
அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தால், இப்போது இதற்காக போராட வேண்டிய சூழலே இருந்திருக்காது

மாநிலங்களவையில் அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தால், இப்போது இதற்காக போராட வேண்டிய சூழலே இருந்திருக்காது.

மாணவர்கள் உட்பட அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜக எம்.பிக்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் யாரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறியதோ, அவரைக் குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலுரை வழங்கும் நபராக மத்திய அரசு தேர்ந்தெடுக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயம் மட்டுமே தெரியும், ஒன்று பாகிஸ்தான், இன்னொன்று நேரு. மற்ற எதைப்பற்றியும் அவர் பேசுவதில்லை.

ஆண்களை விட பெண்கள்தான் இந்தக் குடியுரிமை சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கனிமொழி

குடியுரிமைச் சட்டத்தோடு இது நின்றுவிடப் போவதில்லை. அடுத்து குடியுரிமைப் பதிவேடு கொண்டு வர உள்ளனர்.

எனவே, இது இஸ்லாமியர்களுக்கான பாதிப்பு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இதன்மூலம் பாதிக்கப்படுவர். ஆண்களை விட பெண்கள்தான் இந்தக் குடியுரிமை சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர் “ என்றார்.

இதையும் படிங்க: மோடி பேச்சு அரசு பதிவேட்டிலிருந்து நீக்கம்

Intro:Body:குடியுரிமை சட்டத்தால் இசுலாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர் என்றும், குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

சென்னை தெற்கு மாவட்டம் திமுக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு கையெழுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் மேடையில் கனிமொழி பேசுகையில், குடியுரிமை சட்டத்திற்கு நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் முடிவு செய்திருந்தார்.

ஒரு போர்க்கால அவசரத்தில் இந்த குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி படிக்க கூட நேரம் அளிக்காமல் இந்த சட்டத்தை நிறைவேற்றினர்.

இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு பிரச்சினை உள்ளது. அதுமட்டுமின்றி வேலையின்மை, ஜிடிபி சரிவு உள்ளிட்ட மோசமான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டு இருக்கிறது.

விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த விவசாயிக்கும் இந்த பயன் சென்றடையவில்லை என்றும் நாட்டில் உள்ள அன்றாட பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

மாநிலங்களவையில் அதிமுக இந்த சட்டத்தை எதிர்த்து இருந்தால், இப்போது அனைவரும் இந்த சட்டத்திற்காக போராட வேண்டிய சூழல் இருந்து இருக்காது எனக் கூறினார். மாணவர்கள் உட்பட அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிஜேபி எம்.பிக்கள் மக்களை வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி போராட்டம் நடத்துபவர்களை மிக கேவலமாக விமர்சனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் யாரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறியதோ, அவரை குடியரசு தலைவர் உரைக்கு பதில் உரை வழங்கும் நபராக மத்திய பிஜேபி அரசு தேர்ந்தெடுத்து அனுப்புகிறது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயம் மட்டுமே தெரியும் ஒன்று பாகிஸ்தான், நேரு மட்டுமே. மற்ற எந்த பிரச்சனைக்கும் பேச வில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

தாயார் பார்வதி மகனுக்கு வேல் கொடுத்து போராட அனுப்பிய நாள் தான் இன்றைய தைபூசம். அதேபோல இன்று போராட பெண்கள் வந்துள்ளனர். குடியுரிமை சட்டத்தோடு இந்த பிரச்சனை நின்றுவிட போவதில்லை, அடுத்து குடியுரிமை பதிவேடு கொண்டு வர உள்ளனர். அதேபோல் இது இசுலாமியர்களுக்கான பாதிப்பு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இதன்மூலம் பாதிக்கப்படுவர் என்று கூறிய கனிமொழி, ஆண்களை விட பெண்கள் தான் இந்த குடியுரிமை சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.