சென்னை : கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரம் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாடடில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கும்பமேளா கோவிட் சோதனை ஊழல் குறித்து ஆராய குழு அமைப்பு!