ETV Bharat / city

வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றிய சுங்கத்துறை!

சென்னை: விமானநிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

author img

By

Published : Dec 24, 2019, 8:18 PM IST

Chennai airport latest
Chennai airport latest

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையிலிருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த சென்னையை சேர்ந்த பாலமுருகன் (30), அழகர்சாமி(42), அப்துல் மாலிக்(50), குமார்(43), அன்பரசன்(31), சசிகுமார் (32), காளிமுத்து(45), பாலாஜி(28) ஆகிய எட்டு பேரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க, ஆஸ்திரேலிய டாலர்கள், மலேசிய ரிங்கிட் ஆகிய கரன்சிகளை கண்டுபிடித்தனர். எட்டு பேரிடம் இருந்து மொத்தம் ரூ. 73 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றினார்கள்.

84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றிய சுங்கத்துறை!

அதேபோல் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நூருல்லா(37) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரிடமிருந்தும் ரூ. 10 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

ஒன்பது பேரிடமும் இருந்து மொத்தம் ரூ. 84 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கரன்சிகள் ஹவாலா பணமா? என்ற கோணத்திலும் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் ரூ.3 கோடி மோசடி!

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையிலிருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த சென்னையை சேர்ந்த பாலமுருகன் (30), அழகர்சாமி(42), அப்துல் மாலிக்(50), குமார்(43), அன்பரசன்(31), சசிகுமார் (32), காளிமுத்து(45), பாலாஜி(28) ஆகிய எட்டு பேரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க, ஆஸ்திரேலிய டாலர்கள், மலேசிய ரிங்கிட் ஆகிய கரன்சிகளை கண்டுபிடித்தனர். எட்டு பேரிடம் இருந்து மொத்தம் ரூ. 73 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றினார்கள்.

84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றிய சுங்கத்துறை!

அதேபோல் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நூருல்லா(37) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரிடமிருந்தும் ரூ. 10 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

ஒன்பது பேரிடமும் இருந்து மொத்தம் ரூ. 84 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கரன்சிகள் ஹவாலா பணமா? என்ற கோணத்திலும் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் ரூ.3 கோடி மோசடி!

Intro:சென்னையில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு கடத்தி முயன்ற ரூ. 84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்Body:சென்னையில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு கடத்தி முயன்ற ரூ. 84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் கரன்சிகள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த பாலமுருகன் (30), அழகர்சாமி(42), அப்துல் மாலிக்(50), குமார்(43), அன்பரசன்(31), சசிகுமார் (32), காளிமுத்து(45), பாலாஜி(28) ஆகிய 8 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர்கள், ஆஸ்திரேலிய டாலர்கள், மலேசிய ரிங்கிட் ஆகிய கரன்சிகளை கண்டுபிடித்தனர். 8 பேரிடம் இருந்து ரூ. 73 லட்சத்தி 69 ஆயிரம் மதிப்புள்ள கரன்சிகளை கைப்பற்றினார்கள்.

அதுப்போல் சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது நூருல்லா(37) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 10 லட்சத்தி 53 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்கா டாலர்களை கைப்பற்றினார்கள்.


9 பேரிடமும் இருந்து ரூ. 84 லட்சத்தி 22 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஹவாலா பணமா என்று விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.