ETV Bharat / city

அதிரடி படையினருக்கு இரட்டைப் பணி மூப்பு வழங்கிய அரசாணை ரத்து !

author img

By

Published : Dec 5, 2020, 9:44 PM IST

Updated : Dec 5, 2020, 10:34 PM IST

சென்னை : அதிரடி படையினருக்கு இரட்டை பணி மூப்பு வழங்க காவல் பணி விதியில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

அதிரடிப் படையினருக்கு இரட்டைப் பணி மூப்பு வழங்கிய அரசாணை ரத்து !
அதிரடிப் படையினருக்கு இரட்டைப் பணி மூப்பு வழங்கிய அரசாணை ரத்து !

கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி சிறப்பு அதிரடிப்படையினரால் சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அதிரடி படையில் இருந்த 752 பேருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்க அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அரசாணை ஒன்றை வெளியிட்டார்.

ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னும் 752 பேருக்கும் பணிமூப்பு வழங்கப்பட்டது. இதனால் அதிரடிப்படையில் இடம் பெறாத பிற அலுவலர்களும், காவலர்களும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இரட்டை பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பணிமூப்பு வழங்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அதிரடிப்படையினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நிலுவையில் இருந்துவந்த சூழலில், 2013ஆம் ஆண்டு காவல் பணிகள் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்து பணிமூப்பு மீண்டும் வழங்கும் புதிய அரசாணையை அதிமுக அரசு பிறப்பித்தது.

இந்நிலையில், அதனை எதிர்த்து இரட்டைப் பணி மூப்பால் பாதிக்கப்பட்ட காவல் துறை அலுவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடுத்திருந்தனர்.

அதிரடி படையினருக்கு இரட்டைப் பணி மூப்பு வழங்கிய அரசாணை ரத்து !
அதிரடி படையினருக்கு இரட்டைப் பணி மூப்பு வழங்கிய அரசாணை ரத்து !

இந்த வழக்கானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் தலைமையிலான அமர்வுக்கு முன்பான இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதி, இந்த அரசாணை சட்ட முன்னுதாரணங்களுக்கு எதிரானது. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதால் ரத்து செய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி- ‘ஜெ’வின் பாதை ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!

கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி சிறப்பு அதிரடிப்படையினரால் சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அதிரடி படையில் இருந்த 752 பேருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்க அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அரசாணை ஒன்றை வெளியிட்டார்.

ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னும் 752 பேருக்கும் பணிமூப்பு வழங்கப்பட்டது. இதனால் அதிரடிப்படையில் இடம் பெறாத பிற அலுவலர்களும், காவலர்களும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இரட்டை பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பணிமூப்பு வழங்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அதிரடிப்படையினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நிலுவையில் இருந்துவந்த சூழலில், 2013ஆம் ஆண்டு காவல் பணிகள் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்து பணிமூப்பு மீண்டும் வழங்கும் புதிய அரசாணையை அதிமுக அரசு பிறப்பித்தது.

இந்நிலையில், அதனை எதிர்த்து இரட்டைப் பணி மூப்பால் பாதிக்கப்பட்ட காவல் துறை அலுவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடுத்திருந்தனர்.

அதிரடி படையினருக்கு இரட்டைப் பணி மூப்பு வழங்கிய அரசாணை ரத்து !
அதிரடி படையினருக்கு இரட்டைப் பணி மூப்பு வழங்கிய அரசாணை ரத்து !

இந்த வழக்கானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் தலைமையிலான அமர்வுக்கு முன்பான இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதி, இந்த அரசாணை சட்ட முன்னுதாரணங்களுக்கு எதிரானது. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதால் ரத்து செய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி- ‘ஜெ’வின் பாதை ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!

Last Updated : Dec 5, 2020, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.