சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.
இதனால் அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 484 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 60.71% பேர் ஆண்கள் 39.29% பேர் பெண்கள். அதில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 237 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 12 ஆயிரத்து 929 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் 3 ஆயிரத்து 318 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர். அதிகபட்சமாக உயிரிழப்பு தேனாம்பேட்டை மண்டலத்தில் 427 பேர் இதுவரையிலும் இறந்துள்ளனர். சதவீதம் அடிப்படையில் திருவொற்றியூர் மண்டலம் 2.68 சதவீதம் உள்ளது. சென்னையின் மொத்த இறப்பு சதவீதம் 1.89 சதவீதமாக உள்ளது.
மண்டலவாரியான இறந்தவரின் பட்டியல்,
தேனாம்பேட்டை - 427 பேர்
கோடம்பாக்கம் - 360 பேர்
அண்ணா நகர் - 371 பேர்
ராயபுரம் - 325 பேர்
தண்டையார்பேட்டை - 296 பேர்
திரு.வி.க. நகர் - 343 பேர்
அடையாறு - 240 பேர்
வளசரவாக்கம் - 174 பேர்
அம்பத்தூர் - 199 பேர்
திருவொற்றியூர் - 144 பேர்
மாதவரம் - 81 பேர்
ஆலந்தூர் - 111 பேர்.
சோழிங்கநல்லூர் - 40 பேர்
பெருங்குடி - 103 பேர்
மணலி - 36 பேர்