ETV Bharat / city

' சிதம்பரத்தைக் கைது செய்க' - காமராஜரோடு தன்னை ஒப்பிட்டுப் பேசியதால் புகார்

author img

By

Published : Dec 13, 2019, 5:46 PM IST

சென்னை: வ.உ.சி மற்றும் காமராஜர் போன்ற தேசத் தலைவர்களை தன்னோடு ஒப்பிட்டுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தைக் கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

p chithambaram
p chithambaram

இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வீரமாணிக்கம் சிவா, ' முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து பிணையில் வெளி வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் அவரளித்த பேட்டி ஒன்றில், தான் சிறைக்குச் சென்று வந்ததை தேசத் தலைவர்களான வ.உ.சி மற்றும் காமராஜர் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

நாட்டு விடுதலைக்காக சிறைக்குச் சென்றவர்களை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒப்பிட்டுப் பேசுவது கண்டனத்திற்குரியது. எனவே, தேசத் தலைவர்களின் பெயரைக் கெடுக்கும் வகையில் பேசிய ப. சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ' எனக் கூறினார்.

வீரமாணிக்கம் சிவா, அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி

இதையும் படிங்க: 'வீழ்வேனென்று நினைத்தாயோ, ஒரு நாளும் நாங்கள் வீழமாட்டோம்' - சிதம்பரம் சூளுரை

இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வீரமாணிக்கம் சிவா, ' முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து பிணையில் வெளி வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் அவரளித்த பேட்டி ஒன்றில், தான் சிறைக்குச் சென்று வந்ததை தேசத் தலைவர்களான வ.உ.சி மற்றும் காமராஜர் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

நாட்டு விடுதலைக்காக சிறைக்குச் சென்றவர்களை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒப்பிட்டுப் பேசுவது கண்டனத்திற்குரியது. எனவே, தேசத் தலைவர்களின் பெயரைக் கெடுக்கும் வகையில் பேசிய ப. சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ' எனக் கூறினார்.

வீரமாணிக்கம் சிவா, அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி

இதையும் படிங்க: 'வீழ்வேனென்று நினைத்தாயோ, ஒரு நாளும் நாங்கள் வீழமாட்டோம்' - சிதம்பரம் சூளுரை

Intro:Body:வ.உ.சி மற்றும் காமராஜர் போன்ற தேச தலைவர்களை ஒப்பிட்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பாக புகார்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் வீரமாணிக்கம் சிவா.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பல மோசடி வழக்குகளில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ளார்.இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ப.சிதம்பரம் தான் சிறைக்கு சென்று வந்ததை தேச தலைவர்களான வ.உ.சி மற்றும் காமராஜர் ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தாய் நாட்டு சுதந்திரத்துக்காக சிறைக்கு சென்றவர்களை இவருடன் ஒப்பிட்டு பேசுவது கண்டனத்துக்குரியது எனவும்,தேசதலைவர்களின் பெயரை கெடுக்கும் வகையில் பேசிய ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்..

பேட்டி:வீரமாணிக்கம் சிவா (மாநில ஒருங்கிணைப்பாளர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.