ETV Bharat / city

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 7,876 மாணவர்கள் சேர்க்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Apr 7, 2022, 1:16 PM IST

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் 7 ஆயிரத்து 876 மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்றுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

MK stalin
MK stalin

சென்னை: மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக, சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது ஸ்டாலின், "2021-22ஆம் கல்வியாண்டில், மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7 ஆயிரத்து 876 பேர் சேர்க்கை ஆணை பெற்றுள்ளனர்.

அவர்களில் 6 ஆயிரத்து 100 பேருக்கு கல்விக் கட்டணமாக 38 கோடியே 31 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், இன்று (ஏப். 7) தமிழ்நாடு அரசுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, இட ஒதுக்கீட்டிற்கு உயர் நீதிமன்றம் தந்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். சமூக நீதியை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிலைநாட்டி, நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்திடும் என்றும், திராவிட மாடல் ஆட்சி, அதற்காக அயராது உழைத்திடும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக, சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது ஸ்டாலின், "2021-22ஆம் கல்வியாண்டில், மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7 ஆயிரத்து 876 பேர் சேர்க்கை ஆணை பெற்றுள்ளனர்.

அவர்களில் 6 ஆயிரத்து 100 பேருக்கு கல்விக் கட்டணமாக 38 கோடியே 31 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், இன்று (ஏப். 7) தமிழ்நாடு அரசுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, இட ஒதுக்கீட்டிற்கு உயர் நீதிமன்றம் தந்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். சமூக நீதியை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிலைநாட்டி, நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்திடும் என்றும், திராவிட மாடல் ஆட்சி, அதற்காக அயராது உழைத்திடும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.