ETV Bharat / city

மீண்டும் ஊரடங்கு? கடுமையான கட்டுப்பாடுகள் ? - முதலமைச்சர் நாளை ஆலோசனை

author img

By

Published : Aug 19, 2021, 1:14 PM IST

Updated : Aug 19, 2021, 2:12 PM IST

cm mk stalin
cm mk stalin

13:09 August 19

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(ஆகஸ்ட். 20) துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துவருகிறது. 

இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(ஆகஸ்ட். 20) காலை 11 மணிக்கு, மருத்துவக் குழுவினர், உயர் அலுவலர்கள், காவலர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்தக்கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், கரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் வார இறுதி நாள்கள் ஊரடங்கு விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

அத்துடன் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்தும், கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். 

இதுவரை 11 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் கரோனா தொற்றின் மூன்றாம் அலை தொடங்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது என்பது மக்களை குழப்பமடையச் செய்கிறது. 

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு: 50 விழுக்காடு மாணவர்களுடன் இயங்கலாம்

13:09 August 19

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(ஆகஸ்ட். 20) துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துவருகிறது. 

இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(ஆகஸ்ட். 20) காலை 11 மணிக்கு, மருத்துவக் குழுவினர், உயர் அலுவலர்கள், காவலர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்தக்கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், கரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் வார இறுதி நாள்கள் ஊரடங்கு விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

அத்துடன் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்தும், கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். 

இதுவரை 11 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் கரோனா தொற்றின் மூன்றாம் அலை தொடங்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது என்பது மக்களை குழப்பமடையச் செய்கிறது. 

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு: 50 விழுக்காடு மாணவர்களுடன் இயங்கலாம்

Last Updated : Aug 19, 2021, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.