ETV Bharat / city

மஸ்கட் செல்லும் விமானத்தில் திடீா் இயந்திரக்கோளாறு; பயணிகள் அவதி

author img

By

Published : Aug 8, 2022, 1:24 PM IST

சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் விமானத்தில் திடீா் இயந்திரக்கோளாறு காரணமாக நான்கரை மணி நேரம் புறப்பட தாமதம் ஆனது. இதனால் பயணிகள் விமானநிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் விமானத்தில் திடீா் இயந்திரக்கோளாறு; விமான நிலையத்தில் பயணிகள் அவதி
சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் விமானத்தில் திடீா் இயந்திரக்கோளாறு; விமான நிலையத்தில் பயணிகள் அவதி

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தாமதமானது.

இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் 138 பேரும் மாலை 6 மணிக்கு முன்னதாகவே விமான நிலையம் வந்து, பாதுகாப்பு, சுங்கம்,குடியுரிமை,மருத்துவ பரிசோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்த நிலையில், பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் வந்து விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நள்ளிரவு 1 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை.

இதையடுத்து பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எவ்வளவு நேரம் தான் அமர்ந்திருப்பது? எங்களை மாற்று விமானத்தில் அனுப்பி வையுங்கள், என்று வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து விமான நிறுவன அதிகாரிகள் பயணிகளை சமாதானம் செய்தனர்.

அதன்பின்பு விமானம் பழுது பார்க்கப்பட்டு, நான்கரை மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 2 மணிக்கு மஸ்கட் புறப்பட்ட சென்றது.

இதையும் படிங்க: சென்னைக்கு வந்துள்ள அமெரிக்க இராணுவ தளவாட கப்பல் - பார்வையிட்ட பாதுகாப்புத்துறை செயலாளர்!

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தாமதமானது.

இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் 138 பேரும் மாலை 6 மணிக்கு முன்னதாகவே விமான நிலையம் வந்து, பாதுகாப்பு, சுங்கம்,குடியுரிமை,மருத்துவ பரிசோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்த நிலையில், பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் வந்து விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நள்ளிரவு 1 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை.

இதையடுத்து பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எவ்வளவு நேரம் தான் அமர்ந்திருப்பது? எங்களை மாற்று விமானத்தில் அனுப்பி வையுங்கள், என்று வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து விமான நிறுவன அதிகாரிகள் பயணிகளை சமாதானம் செய்தனர்.

அதன்பின்பு விமானம் பழுது பார்க்கப்பட்டு, நான்கரை மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 2 மணிக்கு மஸ்கட் புறப்பட்ட சென்றது.

இதையும் படிங்க: சென்னைக்கு வந்துள்ள அமெரிக்க இராணுவ தளவாட கப்பல் - பார்வையிட்ட பாதுகாப்புத்துறை செயலாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.