ETV Bharat / city

ஜி ஸ்கொயர் விவகாரம்: எப்ஐஆரிலிருந்து இவர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை

author img

By

Published : May 26, 2022, 7:30 AM IST

Updated : May 26, 2022, 8:21 AM IST

ஜி ஸ்கொயர் விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

chennai-police-commissioner-shankar-jiwal-statement-on-g-square-case
chennai-police-commissioner-shankar-jiwal-statement-on-g-square-case

சென்னை: இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 'ஜி ஸ்கொயர்' என்ற தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அந்நிறுவன அலுவலர் புருஷோத்தம் குமார் என்பவர் கடந்த 21.05.2022 அன்று சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அப்புகாரில், கெவின் என்பவர், 'ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலா (67) குறித்தும், ஜூனியர் விகடன் இதழில் அவதூறு செய்தி வெளியிடப்படும் என்றும், சமூக ஊடகவியலாளர்கள் சிலர் மூலம் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டி, பணம் கேட்பதாகத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற எண். 221/2022-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் முதல் குற்றவாளி கெவின் கடந்த 22.05.2022 அன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கெவின் என்பவர் 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது விசாரணையில் புலனாயிற்று, அதேபோன்று அப்பத்திரிக்கையில், பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதற்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

எனினும், இந்த முதல் தகவல் அறிக்கையில், ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி இவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜி ஸ்கொயர் பிரச்சனை: விகடன் குழுமம் சார்பில் புகார்

சென்னை: இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 'ஜி ஸ்கொயர்' என்ற தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அந்நிறுவன அலுவலர் புருஷோத்தம் குமார் என்பவர் கடந்த 21.05.2022 அன்று சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அப்புகாரில், கெவின் என்பவர், 'ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலா (67) குறித்தும், ஜூனியர் விகடன் இதழில் அவதூறு செய்தி வெளியிடப்படும் என்றும், சமூக ஊடகவியலாளர்கள் சிலர் மூலம் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டி, பணம் கேட்பதாகத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற எண். 221/2022-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் முதல் குற்றவாளி கெவின் கடந்த 22.05.2022 அன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கெவின் என்பவர் 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது விசாரணையில் புலனாயிற்று, அதேபோன்று அப்பத்திரிக்கையில், பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதற்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

எனினும், இந்த முதல் தகவல் அறிக்கையில், ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி இவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜி ஸ்கொயர் பிரச்சனை: விகடன் குழுமம் சார்பில் புகார்

Last Updated : May 26, 2022, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.