இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, வார நாள்களில் (திங்கள்கிழமை - சனிக்கிழமை) உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றுமுதல் (பிப்ரவரி 12) மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை) 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் (காலை 5.30 முதல் காலை 8 மணி வரை, காலை 10 முதல் மாலை 4 மணி வரை, இரவு 7 மணி முதல் 10 மணி வரை) 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி 5 நிமிடத்துக்கு 1 மெட்ரோ ரயில்! - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னை: வார நாள்களில், பீக் ஹவர் எனப்படும் உச்ச நேரங்களில் இயக்கப்பட்டுவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, வார நாள்களில் (திங்கள்கிழமை - சனிக்கிழமை) உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றுமுதல் (பிப்ரவரி 12) மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை) 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் (காலை 5.30 முதல் காலை 8 மணி வரை, காலை 10 முதல் மாலை 4 மணி வரை, இரவு 7 மணி முதல் 10 மணி வரை) 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.