ETV Bharat / city

கழிவுநீர்த்தொட்டிகளில் மனிதர் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான சென்னை ஐஐடியின் ரோபோ!

author img

By

Published : Jun 9, 2022, 6:04 PM IST

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஐஐடியின் புதிய ரோபோ ‘ஹோமோசெப்’. அதுகுறித்து விளக்குகிறது, இக்கட்டுரை..!

கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு
கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு

சென்னை: ஐஐடியின் ரோபோவான 'ஹோமோசெப்' (HomoSEP), இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு, தற்போது களப் பணிக்கு முழுமையாகத் தயார்நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 10 இயந்திரங்கள் அமைக்கத்திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப்பணியாளர்களுடன், ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே தொடர்புகொண்டுள்ளனர்.

மேலும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ஐஐடியில் உள்ள சென்டர் ஃபார் நான் டிஸ்ட்ரக்டிவ் எவாலுவேஷனைச் (Centre for Nondestructive Evaluation) சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியர்களைக் கொண்ட குழுவினர் பல ஆண்டுகளாகப் பணியாற்றி இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர்.

இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரோபோ: தூய்மைப் பணியின்போது நிகழ்ந்த துயர சம்பவத்தில் கணவர்களைப் பறிகொடுத்த நாகம்மா, ருத் மேரி ஆகியோரின் தலைமையில் இயங்கி வரும் சுயஉதவிக் குழுக்களுக்கு, சபாய் கர்மசாரி ஆந்தோலன் (SKA) தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், முதல் இரண்டு ஹோமோசெப் (HomoSEP) இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மனிதக் கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் பாதிப்புகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட இதுபோன்ற சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, அவைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 9 இயந்திரங்களை விநியோகிப்பதற்கான பணிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

சென்னை ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியரும், இந்த திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான பிரபு ராஜகோபால் கூறும்போது, ''பாதியளவு திடமாகவும், பாதியளவு திரவமாகவும் மனித மலத்துடன் உள்ள கழிவுநீர்த்தொட்டி, மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு நச்சு நிறைந்த சூழலைக் கொண்டிருக்கும். மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறைக்கு தடைகளும், தடை உத்தரவுகளும் அமலில் இருந்தபோதிலும், இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

ஹோமோசெப் திட்டம் தனித்துவம் வாய்ந்ததாக விளங்கும். பெரிய அளவிலான சிக்கலான பிரச்னையாக இருந்தாலும், இதற்கான உந்துதலில் மற்றவர்களுடன் இணைய எங்கள் முயற்சி ஒரு உத்வேகமாக இருக்கும். நீர் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வரும் தொடக்க நிறுவனமான, சுறுசுறுப்பான 'சொலினாஸின் குழுவினர்' எங்களோடு இடம்பெற்றுள்ளனர்.

கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு

எங்களுக்கு நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் நிதியுதவி, எங்கள் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த ரோபோக்களை ஒட்டுமொத்தமாகத் தயாரித்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விநியோகிக்க அரசுத் தரப்பில் இருந்து, அடுத்த ஆண்டு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்'' எனத் தொிவித்தார்.

ஐஐடி பேராசிரியர் ராஜகோபால் வழிகாட்டுதலில் திவான்ஷு குமாருக்கு முதுகலை இறுதியாண்டுக்கான ஆய்வுத் திட்டமாக உருவாக்கப்பட்டதுதான் 'ஹோமோசெப்'. 'கார்பன் ஜீரோ சேலன்ஞ்ச் - 2019' போட்டியில் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கரோனா தொற்று காலத்தில் இதற்கான ஆராய்ச்சிப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுவரை சமூக பொறுப்பு நிதியின் மூலம் 10 ஹோமோசெப் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.

ஹோமோசெப் ரோபோவில் உள்ள, தனிப்பயனாக்கப்பட்ட ரோட்டரி பிளேடு மெக்கானிசம் மூலம் கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கடினமான கசடுகளையும் ஒன்றுசேர்த்து, உறிஞ்சும் மெக்கானிசம் (suction mechanism) மூலம் தொட்டியில் உள்ள கழிவுகளை பம்ப் செய்யலாம். உரிய பயிற்சி மற்றும் தகுந்த வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்களே ஹோமோசெப் ரோபோவை இயக்க முடியும். அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பான முறையில் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெஸ்லாவிற்கு ஃடப் கொடுக்கும் இந்திய தொழில்நுட்ப அதிசயம் "டாடா அவின்யா"

சென்னை: ஐஐடியின் ரோபோவான 'ஹோமோசெப்' (HomoSEP), இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு, தற்போது களப் பணிக்கு முழுமையாகத் தயார்நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 10 இயந்திரங்கள் அமைக்கத்திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப்பணியாளர்களுடன், ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே தொடர்புகொண்டுள்ளனர்.

மேலும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ஐஐடியில் உள்ள சென்டர் ஃபார் நான் டிஸ்ட்ரக்டிவ் எவாலுவேஷனைச் (Centre for Nondestructive Evaluation) சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியர்களைக் கொண்ட குழுவினர் பல ஆண்டுகளாகப் பணியாற்றி இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர்.

இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரோபோ: தூய்மைப் பணியின்போது நிகழ்ந்த துயர சம்பவத்தில் கணவர்களைப் பறிகொடுத்த நாகம்மா, ருத் மேரி ஆகியோரின் தலைமையில் இயங்கி வரும் சுயஉதவிக் குழுக்களுக்கு, சபாய் கர்மசாரி ஆந்தோலன் (SKA) தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், முதல் இரண்டு ஹோமோசெப் (HomoSEP) இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மனிதக் கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் பாதிப்புகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட இதுபோன்ற சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, அவைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 9 இயந்திரங்களை விநியோகிப்பதற்கான பணிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

சென்னை ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியரும், இந்த திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான பிரபு ராஜகோபால் கூறும்போது, ''பாதியளவு திடமாகவும், பாதியளவு திரவமாகவும் மனித மலத்துடன் உள்ள கழிவுநீர்த்தொட்டி, மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு நச்சு நிறைந்த சூழலைக் கொண்டிருக்கும். மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறைக்கு தடைகளும், தடை உத்தரவுகளும் அமலில் இருந்தபோதிலும், இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

ஹோமோசெப் திட்டம் தனித்துவம் வாய்ந்ததாக விளங்கும். பெரிய அளவிலான சிக்கலான பிரச்னையாக இருந்தாலும், இதற்கான உந்துதலில் மற்றவர்களுடன் இணைய எங்கள் முயற்சி ஒரு உத்வேகமாக இருக்கும். நீர் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வரும் தொடக்க நிறுவனமான, சுறுசுறுப்பான 'சொலினாஸின் குழுவினர்' எங்களோடு இடம்பெற்றுள்ளனர்.

கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு

எங்களுக்கு நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் நிதியுதவி, எங்கள் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த ரோபோக்களை ஒட்டுமொத்தமாகத் தயாரித்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விநியோகிக்க அரசுத் தரப்பில் இருந்து, அடுத்த ஆண்டு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்'' எனத் தொிவித்தார்.

ஐஐடி பேராசிரியர் ராஜகோபால் வழிகாட்டுதலில் திவான்ஷு குமாருக்கு முதுகலை இறுதியாண்டுக்கான ஆய்வுத் திட்டமாக உருவாக்கப்பட்டதுதான் 'ஹோமோசெப்'. 'கார்பன் ஜீரோ சேலன்ஞ்ச் - 2019' போட்டியில் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கரோனா தொற்று காலத்தில் இதற்கான ஆராய்ச்சிப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுவரை சமூக பொறுப்பு நிதியின் மூலம் 10 ஹோமோசெப் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.

ஹோமோசெப் ரோபோவில் உள்ள, தனிப்பயனாக்கப்பட்ட ரோட்டரி பிளேடு மெக்கானிசம் மூலம் கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கடினமான கசடுகளையும் ஒன்றுசேர்த்து, உறிஞ்சும் மெக்கானிசம் (suction mechanism) மூலம் தொட்டியில் உள்ள கழிவுகளை பம்ப் செய்யலாம். உரிய பயிற்சி மற்றும் தகுந்த வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்களே ஹோமோசெப் ரோபோவை இயக்க முடியும். அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பான முறையில் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெஸ்லாவிற்கு ஃடப் கொடுக்கும் இந்திய தொழில்நுட்ப அதிசயம் "டாடா அவின்யா"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.