சென்னையில் கரோனா வைரசால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். அதில் லேசான அறிகுறி உள்ளவர்கள் கோவிட் கேர் சென்டரில் தங்கவைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதன்படி சென்னையிலுள்ள திருமண மண்டபங்கள், தனியார் கல்லூரிகள், அரசுப் பள்ளிகள் எனப் பல்வேறு இடங்களைத் தேர்வுசெய்து பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைப்பதற்கான அனைத்து வசதிகளும் மாநகராட்சி சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று யோகா தினம் என்பதால் பல்வேறு கோவிட் கேர் சென்டரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பாக மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பல உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன.
இந்த மாதிரியான யோகா பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் அளிப்பதன் மூலம் அவர்களது மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.