ETV Bharat / city

ஆங்கிலோ இந்தியன் நியமன எம்எல்ஏ முறை இனி இல்லை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் இடத்தை ரத்து செய்யும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

indian
indian
author img

By

Published : Jan 9, 2020, 7:46 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினராக நான்சி ஆன் பிரான்சிஸ் சிந்தியா என்பவர் உள்ளார். இந்நிலையில் ஆங்கிலோ இந்தியன் இடத்தை ரத்துசெய்ய வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, இந்தச் சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த மசோதா மீதான விவாதத்தில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் பிரான்சிஸ் சிந்தியா பேசுகையில், "சிறுபான்மையின பிரிவிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவாக நாங்கள் இருக்கிறோம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை 70 ஆண்டுகாலமாக நாங்கள் பெற்றுவந்துள்ளோம். இந்தச் செய்தியை கேட்டதும் எங்களுக்கு மனம் உடைந்துவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு எங்கள் சமூகம் பெரிதும் பங்காற்றியுள்ளது. கல்வி நிறுவனங்கள், ரயில்வே, தபால் நிறுவனங்களில் நாங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தோம். இந்த அரசு எங்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.

'இச்செய்தியை கேட்டதும் மனம் உடைந்து விட்டது' - நான்சி ஆன் பிரான்சிஸ் சிந்தியா

இதற்கு பதிலளித்துப் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "அதிமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும். மத்திய அரசு கொண்டு வந்த இச்சட்டம் குறித்து திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையில் மனு அளித்துள்ளன. ஆங்கிலோ இந்தியன் இடம் தொடர வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரும் இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இச்சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீடு முறையை மீண்டும் கொண்டுவர அரசு முயற்சி செய்யும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினராக நான்சி ஆன் பிரான்சிஸ் சிந்தியா என்பவர் உள்ளார். இந்நிலையில் ஆங்கிலோ இந்தியன் இடத்தை ரத்துசெய்ய வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, இந்தச் சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த மசோதா மீதான விவாதத்தில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் பிரான்சிஸ் சிந்தியா பேசுகையில், "சிறுபான்மையின பிரிவிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவாக நாங்கள் இருக்கிறோம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை 70 ஆண்டுகாலமாக நாங்கள் பெற்றுவந்துள்ளோம். இந்தச் செய்தியை கேட்டதும் எங்களுக்கு மனம் உடைந்துவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு எங்கள் சமூகம் பெரிதும் பங்காற்றியுள்ளது. கல்வி நிறுவனங்கள், ரயில்வே, தபால் நிறுவனங்களில் நாங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தோம். இந்த அரசு எங்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.

'இச்செய்தியை கேட்டதும் மனம் உடைந்து விட்டது' - நான்சி ஆன் பிரான்சிஸ் சிந்தியா

இதற்கு பதிலளித்துப் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "அதிமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும். மத்திய அரசு கொண்டு வந்த இச்சட்டம் குறித்து திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையில் மனு அளித்துள்ளன. ஆங்கிலோ இந்தியன் இடம் தொடர வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரும் இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இச்சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீடு முறையை மீண்டும் கொண்டுவர அரசு முயற்சி செய்யும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

Intro:Body:தமிழக சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏ இடத்தை ரத்து செய்யும் சட்டம் நிறைவேறியது

தமிழக சட்டமன்றத்தில் ஒரு ஆங்கிலோ இந்தியன் நியமன எம்எல்ஏ இடம் உள்ளது. ஆங்கிலோ இந்தியன் நியமன எம்எல்ஏ வாக நான்சி ஆன் பிரான்சிஸ் சிந்தியா என்பவர் உள்ளார். ஆங்கிலோ இந்தியன் இடத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி இந்த சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா மீதான விவாதத்தில் ஆங்கிலோ இந்தியன் எம்எல்ஏ பிரான்சிஸ் பேசுகையில், சிறுபான்மையின பிரிவிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவாக நாங்கள் இருக்கிறோம். தமிழக சட்டப்பேரவையில் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை 70 ஆண்டு காலமாக நாங்கள் பெற்று வந்துள்ளோம். இந்த செய்தியை கேட்டதும் எங்களுக்கு மனம் உடைந்து விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு எங்கள் சமூகம் பெரிதும் பங்காற்றியுள்ளது நினைக்கும்போது பெருமையாக உள்ளது. கல்வி நிறுவனங்கள், ரயில்வே, தபால் நிறுவனங்களில் நாங்கள் முக்கியத்துவம் பெற்று இருந்தோம். இந்த அரசு எங்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும். மத்திய, மாநில அரசுகளில் நாங்கள் தொடர்ந்து அங்கம் வகிப்போம். இதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன், என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சிறுபான்மையின மக்களுக்கு துணையாக அதிமுக அரசு எப்போதும் இருக்கும். மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் குறித்து திமுக அதிமுக ஆம்ஆத்மி ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையில் மனு அளித்துள்ளனர் ஆங்கிலோ இந்தியன் இடம் தொடர வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அவரும் இந்த கோரிக்கையை இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார் என தெரிவித்தார். தொடர்ந்து இந்த சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.