ETV Bharat / city

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டட விவகாரம் - அறப்போர் இயக்கம் புகார்

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டட விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

author img

By

Published : Aug 20, 2021, 8:12 PM IST

அறப்போர் இயக்கம் புகார்
அறப்போர் இயக்கம் புகார்

சென்னை: புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா அடுக்குமாடி கட்டுமானத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து முதலமச்சர் மு.க. ஸ்டாலினிடமும், குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன், குடிசை மாற்று வாரிய அலுவலர்களிடமும் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், "அடுக்குமாடி கட்டடத்தின் மோசமான தரம் வெளிப்படையாக உள்ளது மற்றும் கட்டடத்தின் பல்வேறு இடங்களில் தேய்ந்து கிடக்கும் வெளிப்புற பூச்சு தெரிகிறது. இதனால் கையால் சுவரை சொறிந்ததன் மூலம் வெளிப்புற பூச்சு எப்படி வருகிறது என்பதை இயக்கத்தின் பிரதிநிதிகள் தெளிவாகக் கண்டறிந்துள்ளது. மேலும் அட்டவணையில் இருப்பதை விட குறைவான சிமென்ட் கலப்பது, கட்டடத்தின் வெளிப்புற பூச்சு மிகவும் மோசமான தரத்தில் உள்ளது.

தரமற்றதாக இருக்கும் சுவர்கள்

மூன்றாம் தரப்புக்கும் பொறுப்பான பொறியாளர்கள் தரக் கடைப்பிடிப்புச் சான்றிதழை வழங்கியிருப்பதால், அவர்கள் ஒப்பந்தக்காரருடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதோடு, அவர்கள் இந்த ஊழல் குற்றச் செயலுக்கு முதன்மையானவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிப்புற சுவர்களில் பூச்சு மோசமாக இருந்த நிலையில் முதல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டின் ஸ்லாப் மிகவும் தரமற்றதாக இருப்பதையும், கையில் இழுப்பதன் மூலம் உடைகிறது என்பதையும் கண்டறிந்தோம். எனவே முழு கட்டடத்தின் தரத்தையும் சரிபார்க்க வேண்டும். சுவர்கள், கதவுகள், பூட்டுகள், குழாய்கள் போன்றவைகள் தரமற்றதாக இருப்பது தெரிந்தது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குடிசை மாற்று வாரியத்தின் கட்டடத்தில் செய்யப்பட்ட ஒட்டுவேலை மோசமான தரத்தின் ஆதாரங்களை ஆவணப்படுத்துவதற்கு முன்பு காவல் துறை முன்னிலையில் பொறியாளர்களைப் ஆஜர்படுத்தி ஆவணப்படுத்திய பின்னரே மறுபடியும் வேலைகளை தொடங்க வேண்டும்.

இந்த கட்டடம் பொது நிதிகள் மூலம் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட உள்கட்டமைப்பாகும். எனவே மிகவும் வெளிப்படைத்தன்மை தேவை. இன்று வரை குடிசை மாற்று வாரியம் ஒரு டெண்டரையும் அதன் கட்டுமானத்திற்கான நிபந்தனைகளையும் வெளியிடவில்லை.

ஒப்பந்தக்காரரின் பெயர், மூன்றாம் தரத்திற்கான சான்றிதழ், திட்டத்தின் நிறைவு அறிக்கை ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்ட கட்டண விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்படப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டட விவகாரம்: கலக்கத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் வட்டாரம்!

சென்னை: புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா அடுக்குமாடி கட்டுமானத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து முதலமச்சர் மு.க. ஸ்டாலினிடமும், குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன், குடிசை மாற்று வாரிய அலுவலர்களிடமும் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், "அடுக்குமாடி கட்டடத்தின் மோசமான தரம் வெளிப்படையாக உள்ளது மற்றும் கட்டடத்தின் பல்வேறு இடங்களில் தேய்ந்து கிடக்கும் வெளிப்புற பூச்சு தெரிகிறது. இதனால் கையால் சுவரை சொறிந்ததன் மூலம் வெளிப்புற பூச்சு எப்படி வருகிறது என்பதை இயக்கத்தின் பிரதிநிதிகள் தெளிவாகக் கண்டறிந்துள்ளது. மேலும் அட்டவணையில் இருப்பதை விட குறைவான சிமென்ட் கலப்பது, கட்டடத்தின் வெளிப்புற பூச்சு மிகவும் மோசமான தரத்தில் உள்ளது.

தரமற்றதாக இருக்கும் சுவர்கள்

மூன்றாம் தரப்புக்கும் பொறுப்பான பொறியாளர்கள் தரக் கடைப்பிடிப்புச் சான்றிதழை வழங்கியிருப்பதால், அவர்கள் ஒப்பந்தக்காரருடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதோடு, அவர்கள் இந்த ஊழல் குற்றச் செயலுக்கு முதன்மையானவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிப்புற சுவர்களில் பூச்சு மோசமாக இருந்த நிலையில் முதல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டின் ஸ்லாப் மிகவும் தரமற்றதாக இருப்பதையும், கையில் இழுப்பதன் மூலம் உடைகிறது என்பதையும் கண்டறிந்தோம். எனவே முழு கட்டடத்தின் தரத்தையும் சரிபார்க்க வேண்டும். சுவர்கள், கதவுகள், பூட்டுகள், குழாய்கள் போன்றவைகள் தரமற்றதாக இருப்பது தெரிந்தது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குடிசை மாற்று வாரியத்தின் கட்டடத்தில் செய்யப்பட்ட ஒட்டுவேலை மோசமான தரத்தின் ஆதாரங்களை ஆவணப்படுத்துவதற்கு முன்பு காவல் துறை முன்னிலையில் பொறியாளர்களைப் ஆஜர்படுத்தி ஆவணப்படுத்திய பின்னரே மறுபடியும் வேலைகளை தொடங்க வேண்டும்.

இந்த கட்டடம் பொது நிதிகள் மூலம் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட உள்கட்டமைப்பாகும். எனவே மிகவும் வெளிப்படைத்தன்மை தேவை. இன்று வரை குடிசை மாற்று வாரியம் ஒரு டெண்டரையும் அதன் கட்டுமானத்திற்கான நிபந்தனைகளையும் வெளியிடவில்லை.

ஒப்பந்தக்காரரின் பெயர், மூன்றாம் தரத்திற்கான சான்றிதழ், திட்டத்தின் நிறைவு அறிக்கை ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்ட கட்டண விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்படப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டட விவகாரம்: கலக்கத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் வட்டாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.