ETV Bharat / city

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடை நீட்டிப்பு..!

author img

By

Published : Aug 8, 2019, 7:53 PM IST

சென்னை: நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இந்தத் தேர்தலை நடத்தியது செல்லாது என அறிவிக்கக் கோரி பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தி முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்குவந்தது. அப்போது, நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்துவிட்டதாகவும், இதுவரை அதற்காக 30 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தபால் வாக்குகள் 7 நாட்களுக்கு முன்னரே அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, மனுதாரர் பெஞ்சமினுக்கு தாமதமாக தபால் வாக்கு சென்றது ஒரு விபத்து என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏப்ரல் 18ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால், நிர்வாகிகள் படப்பிடிப்பிற்காக வெளியூர்களில் இருந்ததால் 10 நாட்கள் காலதாமதமாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாகவும், முறையாக விதிகளை பின்பற்றித்தான் தேர்தல் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

மேலும், நடிகர் சங்க நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய முடியவில்லை என்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால் அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் சங்க தேர்தல் முடிவுளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இந்தத் தேர்தலை நடத்தியது செல்லாது என அறிவிக்கக் கோரி பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தி முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்குவந்தது. அப்போது, நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்துவிட்டதாகவும், இதுவரை அதற்காக 30 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தபால் வாக்குகள் 7 நாட்களுக்கு முன்னரே அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, மனுதாரர் பெஞ்சமினுக்கு தாமதமாக தபால் வாக்கு சென்றது ஒரு விபத்து என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏப்ரல் 18ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால், நிர்வாகிகள் படப்பிடிப்பிற்காக வெளியூர்களில் இருந்ததால் 10 நாட்கள் காலதாமதமாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாகவும், முறையாக விதிகளை பின்பற்றித்தான் தேர்தல் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

மேலும், நடிகர் சங்க நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய முடியவில்லை என்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால் அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் சங்க தேர்தல் முடிவுளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Intro:nullBody:நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இந்த தேர்தலை நடத்தியது செல்லாது என அறிவிக்க கோரி பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் சங்க தேர்தலை நடத்தி முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டதாகவும், இதுவரை அதற்காக 30 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தபால் வாக்குகள் 7 நாட்களுக்கு முன்னரே அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 90 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் மனுதாரர் பெஞ்சமனுக்கு தாமதமாக தபால் வாக்கு சென்றது ஒரு விபத்து என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் ஏப்ரல் 18-ம் தேதி முடிவடைந்தது. ஆனால், நிர்வாகிகள் படப்பிடிப்பிற்காக வெளியூர்களில் இருந்ததால் 10 நாட்கள் காலதாமதமாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாகவும், முறையாக விதிகளை பின்பற்றி தான் தேர்தல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நடிகர் சங்க நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய முடியவில்லை என்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால் அவர்கள் மிகுந்த பாதிப்பிக்கு உள்ளாவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் சங்க தேர்தல் முடிவுளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.