ETV Bharat / city

காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என்ற கருத்துகள் அதிரடியாக நீக்கம்

author img

By

Published : Apr 20, 2022, 3:27 PM IST

தமிழ்நாடு காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர் என்ற தனி நீதிபதியின் கருத்துக்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

90-percent-police-officers-corrupt-chennai-single-judge-remarks-removed
90-percent-police-officers-corrupt-chennai-single-judge-remarks-removed

சென்னை: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், பொயப்புகார் என்பதை உறுதி செய்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து வசந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் மறுவிசாரணை நடத்த உத்தவிட்டது. ஆனால், இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் முடித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த முறை வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதி வேல்முருகன், காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்.

10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக உள்ளனர். ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டார். இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.என் பிரகாஷ் அமர்வில் இன்று (ஏப். 20) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு காவல்துறை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து பின்பு, வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல.

இதுபோன்ற கருத்துக்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றக்கூடிய காவலர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள் பற்றிய நீதிபதி கருத்துகள் தெரிவிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பெண் எஸ்.பி பாலியல் புகார் வழக்கு: ஆண் எஸ்.பி.,யின் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

சென்னை: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், பொயப்புகார் என்பதை உறுதி செய்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து வசந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் மறுவிசாரணை நடத்த உத்தவிட்டது. ஆனால், இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் முடித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த முறை வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதி வேல்முருகன், காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்.

10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக உள்ளனர். ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டார். இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.என் பிரகாஷ் அமர்வில் இன்று (ஏப். 20) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு காவல்துறை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து பின்பு, வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல.

இதுபோன்ற கருத்துக்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றக்கூடிய காவலர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள் பற்றிய நீதிபதி கருத்துகள் தெரிவிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பெண் எஸ்.பி பாலியல் புகார் வழக்கு: ஆண் எஸ்.பி.,யின் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.