ETV Bharat / business

ஏற்றம், இறக்கம் கண்ட இந்திய பங்குச்சந்தை!

author img

By

Published : Aug 25, 2020, 6:07 PM IST

மும்பை: இன்றைய வர்த்தக நாள் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம், இறக்கம் என்று மாறி மாறி வர்த்தகமாகின.

Market Roundup
Market Roundup

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (ஆகஸ்ட் 24) வர்த்தகமானதைவிட சுமார் 130 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் என்று மாறி மாறி வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் சென்செக்ஸ் 44.80 புள்ளிகள் (0.12 விழுக்காடு) உயர்ந்து 38,843.88 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.8 புள்ளிகள் (0.05 விழுக்காடு) உயர்ந்து 11,472.25 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக பன்சாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை ஏற்றம் கண்டு வர்த்தகமானது. அதேபோல், எஸ்பிஐ, டெக் மஹேந்திரா, ஆசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எம் & எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

மறுபுறம் என்.டி.பி.சி., சன் பார்மா, நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல் மற்றும் எல் & டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

ஏற்றம்-இறக்கம் என்று மாறி மாறி வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை

சர்வதேச பங்குச்சந்தை

சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல் பங்குச்சந்தைகள் ஏற்றத்திலும், ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தை இறக்கத்திலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதேபோல ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 0.39 விழுக்காடு உயர்ந்து, பேரல் ஒன்று 45.82 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வித மாற்றமும் இன்றி 74.33 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: நிதி திரட்ட பங்குகளை விற்கும் இந்திய வங்கிகள்!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (ஆகஸ்ட் 24) வர்த்தகமானதைவிட சுமார் 130 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் என்று மாறி மாறி வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் சென்செக்ஸ் 44.80 புள்ளிகள் (0.12 விழுக்காடு) உயர்ந்து 38,843.88 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.8 புள்ளிகள் (0.05 விழுக்காடு) உயர்ந்து 11,472.25 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக பன்சாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை ஏற்றம் கண்டு வர்த்தகமானது. அதேபோல், எஸ்பிஐ, டெக் மஹேந்திரா, ஆசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எம் & எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

மறுபுறம் என்.டி.பி.சி., சன் பார்மா, நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல் மற்றும் எல் & டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

ஏற்றம்-இறக்கம் என்று மாறி மாறி வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை

சர்வதேச பங்குச்சந்தை

சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல் பங்குச்சந்தைகள் ஏற்றத்திலும், ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தை இறக்கத்திலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதேபோல ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 0.39 விழுக்காடு உயர்ந்து, பேரல் ஒன்று 45.82 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வித மாற்றமும் இன்றி 74.33 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: நிதி திரட்ட பங்குகளை விற்கும் இந்திய வங்கிகள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.