பி.ஐ.டி.எஃப் கட்டமைப்பில் ரூ.250 கோடிக்கு புதிதாக திட்டம் ஒன்றை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள மூன்று, நான்கு, ஐந்து, ஆறாம் கட்ட நகரங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் டிஜிட்டல் வர்த்தகத்தை மேம்படுத்த இந்த தொகை பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கைகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் எனவும் வங்கிக்கணக்கு தொடங்கி, செல்பேசிகள், கிரெடிட், டெபிட் கார்டுகள் என அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் கட்டமைப்பு வசதியில் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இது குறித்து ரிசர்வ் வங்கி, பணப்பரிவர்த்தனை குறைப்பதன் மூலம் வங்கிளுக்கான நிர்வாக, வேலைப்பளு குறைக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்படும். மேலும், கரோனா போன்ற பேரிடர் காலத்தில் இதுபோன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அத்தியாவசிய வர்த்தக செயல்பாடுகள் தடையின்றி இயங்க உதவும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சட்ட திருத்தம் தொழிலாளர் நலனை பாதுகாக்க வேண்டும் - உதய் கோடக் பேட்டி