ETV Bharat / business

2ஆம் கட்ட நிவாரண நிதி: மோடியுடன் நிதித் துறை அமைச்சர் ஆலோசனை

author img

By

Published : May 3, 2020, 9:31 AM IST

டெல்லி: நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து இரண்டாம்கட்ட நிவாரண நிதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மோடி
மோடி

கரோனா பெருந்தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம், விலையில்லா உணவு தானியங்கள், எரிவாயு உருளைகள் ஆகியவை ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டன. பெண்கள், முதியவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில், இரண்டாம்கட்ட நிவாரண நிதி அளிப்பது குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சரைச் சந்தித்து மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் மோடியிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, விமான போக்குவரத்துத் துறை, தொழிலாளர் நலத் துறை, மின்சாரத் துறை ஆகிய அமைச்சகங்களின் அமைச்சர்களை சந்தித்து மோடி ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க: கோவிட் - 19: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் குழுவில் மாற்றம்

கரோனா பெருந்தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம், விலையில்லா உணவு தானியங்கள், எரிவாயு உருளைகள் ஆகியவை ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டன. பெண்கள், முதியவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில், இரண்டாம்கட்ட நிவாரண நிதி அளிப்பது குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சரைச் சந்தித்து மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் மோடியிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, விமான போக்குவரத்துத் துறை, தொழிலாளர் நலத் துறை, மின்சாரத் துறை ஆகிய அமைச்சகங்களின் அமைச்சர்களை சந்தித்து மோடி ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க: கோவிட் - 19: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் குழுவில் மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.