ETV Bharat / briefs

2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழ்நாடு நிதித் துறை

author img

By

Published : Jul 11, 2020, 11:38 PM IST

சென்னை : தமிழ்நாடு நிதித் துறை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணைய பத்திரங்கள் ஏலம் - தமிழ்நாடு நிதித் துறை
2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணைய பத்திரங்கள் ஏலம் - தமிழ்நாடு நிதித் துறை

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிதித்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," பத்தாண்டு காலங்களுக்கு 2000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வடிவிலான பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் ஜுலை 14, 2020 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவையின் (Reserve Bank of India Core Banking Solution) (E-Kuber) System] ஜூலை 14 ஆம் தேதிக்குள் இதற்கான மின்னணு படிவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிதித்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," பத்தாண்டு காலங்களுக்கு 2000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வடிவிலான பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் ஜுலை 14, 2020 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவையின் (Reserve Bank of India Core Banking Solution) (E-Kuber) System] ஜூலை 14 ஆம் தேதிக்குள் இதற்கான மின்னணு படிவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.