விருதுநகர் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவர், போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
செல்வகுமார் உடல்நிலை சரியில்லாததால் கடந்த 10 நாள்களாக மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஏப்.23) தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக விருதுநகர்-சிவகாசி சாலையிலுள்ள அரசு மதுபானக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளார்.
உடனே அருகிலிருந்தவர்கள் ஆமத்தூர் காவல் நிலையத்திற்குதத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், செல்வகுமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.