ETV Bharat / briefs

நிவாரண உதவி கோரி கார் ஓட்டுநர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ஒத்துவைப்பு!

சென்னை : ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

author img

By

Published : Jul 1, 2020, 3:00 PM IST

நிவாரண உதவி கோரி கார் ஓட்டுநர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ஒத்துவைப்பு!
நிவாரண உதவி கோரி கார் ஓட்டுநர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ஒத்துவைப்பு!

இது தொடர்பாக தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கோவிட்-19 பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எங்களுக்கு நிவாரண நிதியுதவியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் .மேலும், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தகுதிச் சான்றை புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.

போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான வரிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை சந்தித்திராத நபர்கள் யாருமே இல்லை என்ற நிலைதான் தொடர்கிறது.

ஊரடங்கை காரணம் காட்டி இழப்பீடுகள் வழங்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட பல வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன " என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து, அந்த உத்தரவுகளை தாக்கல் செய்யும்படி, அரசுத்தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கோவிட்-19 பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எங்களுக்கு நிவாரண நிதியுதவியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் .மேலும், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தகுதிச் சான்றை புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.

போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான வரிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை சந்தித்திராத நபர்கள் யாருமே இல்லை என்ற நிலைதான் தொடர்கிறது.

ஊரடங்கை காரணம் காட்டி இழப்பீடுகள் வழங்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட பல வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன " என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து, அந்த உத்தரவுகளை தாக்கல் செய்யும்படி, அரசுத்தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.