ETV Bharat / briefs

ஆப்கான் சுழலில் சிக்கித் தவிக்கும் இந்திய அணி... கரை சேர்ப்பாரா தோனி?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறிவருகிறது.

author img

By

Published : Jun 22, 2019, 5:52 PM IST

ஆஃப்கான் சூழலில் சிக்கித் தவிக்கும் இந்திய அணி

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சவுதாம்ப்டனில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் ஆரம்பமே மோசமாக அமைந்தது. இந்தத் தொடரில் இரண்டு சதங்களை விளாசி ஃபார்மில் இருந்த ரோகித் ஷர்மா, முஜிப்-உர்-ரஹ்மான் பந்துவீச்சில் ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

அவரைத் தொடர்ந்து வந்த கோலி, கே.எல். ராகுலடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இந்த தருணத்தில், கே.எல். ராகுல் முகமது நபியின் பந்துவீச்சில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Kohli
கோலி

பின்னர் நான்காவது வரிசையில் களமிறங்கிய விஜய் சங்கர், கோலியுடன் தாக்குப்பிடித்து ஆடினார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் உயரும் என நினைத்த ரசிகர்களுக்கு விஜய் சங்கர் அதிர்ச்சி தந்தார். ரஹ்மத் ஷாவின் பந்துவீச்சில் விஜய் சங்கர் எல்.பி.டபிள்யூ. முறையில் நடையைக் கட்ட, மறுமுனையில், சிறப்பாக பேட்டிங் செய்த கோலி ஒருநாள் போட்டியில் தனது 52ஆவது அரைசதத்தை விளாசிய கையோடு முகமது நபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சற்றுமுன்வரை இந்திய அணி 40 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்துள்ளது. தோனி 22 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் தடுமாறும் இந்திய அணியை தோனி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கரை சேர்ப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சவுதாம்ப்டனில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் ஆரம்பமே மோசமாக அமைந்தது. இந்தத் தொடரில் இரண்டு சதங்களை விளாசி ஃபார்மில் இருந்த ரோகித் ஷர்மா, முஜிப்-உர்-ரஹ்மான் பந்துவீச்சில் ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

அவரைத் தொடர்ந்து வந்த கோலி, கே.எல். ராகுலடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இந்த தருணத்தில், கே.எல். ராகுல் முகமது நபியின் பந்துவீச்சில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Kohli
கோலி

பின்னர் நான்காவது வரிசையில் களமிறங்கிய விஜய் சங்கர், கோலியுடன் தாக்குப்பிடித்து ஆடினார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் உயரும் என நினைத்த ரசிகர்களுக்கு விஜய் சங்கர் அதிர்ச்சி தந்தார். ரஹ்மத் ஷாவின் பந்துவீச்சில் விஜய் சங்கர் எல்.பி.டபிள்யூ. முறையில் நடையைக் கட்ட, மறுமுனையில், சிறப்பாக பேட்டிங் செய்த கோலி ஒருநாள் போட்டியில் தனது 52ஆவது அரைசதத்தை விளாசிய கையோடு முகமது நபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சற்றுமுன்வரை இந்திய அணி 40 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்துள்ளது. தோனி 22 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் தடுமாறும் இந்திய அணியை தோனி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கரை சேர்ப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.