திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிலும், பகல் பொழுதுகளில் வெயில் அதிகமாகக் காணப்பட்டாலும் மாலை நேரங்களில் மேகம் சூழ்ந்து காணப்பட்டது.
இந்நிலையில், நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பரளி, வத்திபட்டி, கோவில்பட்டி, லிங்கவாடி, சமுத்திராபட்டி, சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (ஜூலை 12) மாலை திடீர் என கருமேகங்கள் சூழ்ந்தன. அதைத் தொடர்ந்து பலத்தக் காற்று, இடியுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரமாகப் பெய்தது.
இதனால் சாலைகள், வீதிகளில் இருபுறமும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், நத்தம் பகுதியில் பல நாள்களுக்குப் பிறகு பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் நின்றுபோன டயர் ரீடிரேடிங் தொழில்'