ETV Bharat / briefs

திண்டுக்கலில் கோவிட்-19 பரிசோதனைகளை அதிகப்படுத்த திமுக கோரிக்கை!

author img

By

Published : Jul 1, 2020, 9:58 PM IST

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு சமூக பரவலாக மாறியுள்ளதால் கண்டறிதல் சோதனையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கலில் கோவிட்-19 பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டுமென திமுக கோரிக்கை!
திண்டுக்கலில் கோவிட்-19 பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டுமென திமுக கோரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்த அவர் திமுக சார்பில் கோரிக்கை மனுவொன்றையும் கையளித்தார்.

அம்மனுவில், "திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. ஆகையால் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தேவையான அளவு பரிசோதனை கருவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், வருவாய்த்துறையினர் ஆகியோருக்கு முகக் கவசங்கள், வைரஸ் தடுப்பு உடைகள், கிருமிநாசினிகள் வழங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் மத்தியில் கரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின்போது ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, "திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புறங்களில் பரவி வந்த கரோனா தற்பொழுது கிராமப்புறங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக பரவலாக கரோனா தொற்று மாறியுள்ளது உறுதியாகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் அளவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் தமிழ்நாடு அரசுதான். கரோனாவை வைத்து அதிமுக அரசு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. கரோனா தொடர்பாக யார் அறிவுரை கூறினாலும், அதனை கேட்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக இல்லை" என்றார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்த அவர் திமுக சார்பில் கோரிக்கை மனுவொன்றையும் கையளித்தார்.

அம்மனுவில், "திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. ஆகையால் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தேவையான அளவு பரிசோதனை கருவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், வருவாய்த்துறையினர் ஆகியோருக்கு முகக் கவசங்கள், வைரஸ் தடுப்பு உடைகள், கிருமிநாசினிகள் வழங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் மத்தியில் கரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின்போது ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, "திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புறங்களில் பரவி வந்த கரோனா தற்பொழுது கிராமப்புறங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக பரவலாக கரோனா தொற்று மாறியுள்ளது உறுதியாகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் அளவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் தமிழ்நாடு அரசுதான். கரோனாவை வைத்து அதிமுக அரசு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. கரோனா தொடர்பாக யார் அறிவுரை கூறினாலும், அதனை கேட்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக இல்லை" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.