ETV Bharat / briefs

கடலூரில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Jun 13, 2020, 3:41 AM IST

கடலூர் : இன்று மேலும் எட்டு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Cuddalore Corona positive cases
Cuddalore Corona positive cases

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 512 ஆக இருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து விருதாச்சலம் வந்த நான்கு பேரும் சென்னையிலிருந்து கடலூர் வந்த மூன்று பேருக்கும் மேற்கு வங்காளத்தில் இருந்து புவனகிரி வந்த ஒருவருக்கும் என இன்று மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 520ஆக அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு கட்டைகள் அமைத்து சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கிடப்பட்டு தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை கடலூர், சிதம்பரம், விருதாச்சலம், சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் . இதனால் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 464 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 512 ஆக இருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து விருதாச்சலம் வந்த நான்கு பேரும் சென்னையிலிருந்து கடலூர் வந்த மூன்று பேருக்கும் மேற்கு வங்காளத்தில் இருந்து புவனகிரி வந்த ஒருவருக்கும் என இன்று மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 520ஆக அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு கட்டைகள் அமைத்து சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கிடப்பட்டு தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை கடலூர், சிதம்பரம், விருதாச்சலம், சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் . இதனால் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 464 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.