ETV Bharat / briefs

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறுவன் கைது

நாகை: ஆறு வயது சிறுமி ஒருவருக்கு 17 வயது சிறுவன் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

author img

By

Published : Jun 26, 2020, 1:13 PM IST

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறுவன் கைது
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறுவன் கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியிடம், அவரின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் வேலை முடிந்து சிறுமியின் பெற்றோர் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் வருவதை அறிந்த அச்சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், சிறுவன் மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியிடம், அவரின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் வேலை முடிந்து சிறுமியின் பெற்றோர் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் வருவதை அறிந்த அச்சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், சிறுவன் மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.