ETV Bharat / briefs

'கார்த்திகாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்தது' - குமுறும் டாப்சி

author img

By

Published : Jun 28, 2020, 7:18 PM IST

நடிகை டாப்ஸி தனது வீட்டிற்கு ரூ.36 ஆயிரம் கரன்ட் பில் வந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

டாப்ஸி
டாப்ஸி

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகமாகி வருகிறது. இதற்குத் திரை பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால், இதுபோன்ற சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை டாப்ஸி தன்னுடைய வீட்டிற்கு ரூ.36 ஆயிரம் கரன்ட் பில் வந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மூன்று மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது என்பதால், என் வீட்டில் எந்த விதமான புதிய எலக்ட்ரிக் பொருள்களும் வாங்கவில்லை. ஏற்கெனவே நான் வாங்கிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். அவ்வாறு இருக்கும்போது திடீரென கரன்ட் பில் இவ்வளவு உயர்ந்தது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. மின்கட்டணம் எந்தவகையில் சார்ஜ் செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் பிரசன்னா, நடிகை கார்த்திகா ஆகியோர் வீட்டில் மின்சார பில் அதிகமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகமாகி வருகிறது. இதற்குத் திரை பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால், இதுபோன்ற சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை டாப்ஸி தன்னுடைய வீட்டிற்கு ரூ.36 ஆயிரம் கரன்ட் பில் வந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மூன்று மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது என்பதால், என் வீட்டில் எந்த விதமான புதிய எலக்ட்ரிக் பொருள்களும் வாங்கவில்லை. ஏற்கெனவே நான் வாங்கிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். அவ்வாறு இருக்கும்போது திடீரென கரன்ட் பில் இவ்வளவு உயர்ந்தது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. மின்கட்டணம் எந்தவகையில் சார்ஜ் செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் பிரசன்னா, நடிகை கார்த்திகா ஆகியோர் வீட்டில் மின்சார பில் அதிகமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.