ETV Bharat / briefs

திருச்சியில் இன்று புதியதாக 188 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Jul 27, 2020, 7:07 PM IST

திருச்சி: இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Today Corona Positive 188 Cases in Trichy
Today Corona Positive 188 Cases in Trichy

தமிழ்நாட்டில் மேலும் 6 ஆயிரத்து 993 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நாளில் 5 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர்; 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சியில் நேற்று (ஜூலை 26) வரை 1,197 பேர் கரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 73 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 234ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருச்சியில் 1,311 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மேலும் 6 ஆயிரத்து 993 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நாளில் 5 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர்; 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சியில் நேற்று (ஜூலை 26) வரை 1,197 பேர் கரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 73 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 234ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருச்சியில் 1,311 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ்க்கு மூலிகை மருந்து: சித்த மருத்துவ கழக செயலர் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.