தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஆக.30) ஒரே நாளில் 177 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 494 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றனர். இன்று ஒரே நாளில் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 837 பேர் தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.