ETV Bharat / briefs

12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மறுகூட்டல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் - தங்கம் தென்னரசு

author img

By

Published : Jul 23, 2020, 4:12 AM IST

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்வது குறித்த அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக வெளியிட வேண்டும்  என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்- தங்கம் தென்னரசு
12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்- தங்கம் தென்னரசு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளி வந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் பள்ளி கல்வி துறை மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் இருப்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான அன்றே மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான அறிவிப்புக்களையும், தேர்வுகள் இயக்ககம் உடனே வெளியிடுவதுதான் நடைமுறையாகும்.

அப்போதுதான் மாணவர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், தாங்கள் ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றுள்ள மதிப்பெண்கள் சார்ந்து தாங்கள் செய்ய விரும்பும் முறையீடுகளை விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கோ அல்லது மறுகூட்டலுக்கோ தெரிவிக்க இயலும்.

ஆனால், மிக முக்கியமான, மாணவர்களுக்கு உடனடித் தேவையான இந்த அறிவிப்பினைத் தேர்வு முடிவுகள் வெளிவந்து ஒருவார காலம் ஆகியும் இன்னும் வெளியிடாபடவில்லை.

பல கல்லூரிகள், மாணவர்களுக்கான சேர்க்கையினை அறிவித்து அவை தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள சூழலில், தங்கள் உயர்கல்வி வாய்ப்புகள் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மறுமதிப்பீடு / மறுகூட்டலினை எதிர்நோக்கும் மாணவர்களும், அவர்களின் எதிகாலம் குறித்துக் கவலையில் ஆழ்ந்துள்ள பெற்றோர்களும் எழுப்பும் வேதனைக்குரல் காதில் விழுந்தும் விழாதது போலவே பள்ளிக்கல்வித்துறை நடந்து கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வண்ணம், பள்ளிக்கல்வித்துறை உடனடியாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளி வந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் பள்ளி கல்வி துறை மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் இருப்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான அன்றே மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான அறிவிப்புக்களையும், தேர்வுகள் இயக்ககம் உடனே வெளியிடுவதுதான் நடைமுறையாகும்.

அப்போதுதான் மாணவர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், தாங்கள் ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றுள்ள மதிப்பெண்கள் சார்ந்து தாங்கள் செய்ய விரும்பும் முறையீடுகளை விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கோ அல்லது மறுகூட்டலுக்கோ தெரிவிக்க இயலும்.

ஆனால், மிக முக்கியமான, மாணவர்களுக்கு உடனடித் தேவையான இந்த அறிவிப்பினைத் தேர்வு முடிவுகள் வெளிவந்து ஒருவார காலம் ஆகியும் இன்னும் வெளியிடாபடவில்லை.

பல கல்லூரிகள், மாணவர்களுக்கான சேர்க்கையினை அறிவித்து அவை தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள சூழலில், தங்கள் உயர்கல்வி வாய்ப்புகள் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மறுமதிப்பீடு / மறுகூட்டலினை எதிர்நோக்கும் மாணவர்களும், அவர்களின் எதிகாலம் குறித்துக் கவலையில் ஆழ்ந்துள்ள பெற்றோர்களும் எழுப்பும் வேதனைக்குரல் காதில் விழுந்தும் விழாதது போலவே பள்ளிக்கல்வித்துறை நடந்து கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வண்ணம், பள்ளிக்கல்வித்துறை உடனடியாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.