ETV Bharat / briefs

பழவேற்காட்டில் 126 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்!

author img

By

Published : Sep 8, 2020, 7:32 PM IST

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே வாகன சோதனையின்போது 126 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட போதை பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

126 Kg Banned Drugs Seized In Palaverkadu
126 Kg Banned Drugs Seized In Palaverkadu

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த ஆண்டார்மடம் அருகே காவல் ஆய்வாளர் மகிதா அண்ணா கிருஷ்டி தலைமையிலான காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், 126 கிலோ தடை செய்யப்பட்ட பான், குட்கா, புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், போதை பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பழவேற்காடு கோணிக்கடைத் தெருவை சேர்ந்த பிரபு என்பதும் பழவேற்காட்டில் இது போன்ற பல்வேறு குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவரை கைது செய்து பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த ஆண்டார்மடம் அருகே காவல் ஆய்வாளர் மகிதா அண்ணா கிருஷ்டி தலைமையிலான காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், 126 கிலோ தடை செய்யப்பட்ட பான், குட்கா, புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், போதை பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பழவேற்காடு கோணிக்கடைத் தெருவை சேர்ந்த பிரபு என்பதும் பழவேற்காட்டில் இது போன்ற பல்வேறு குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவரை கைது செய்து பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.