ETV Bharat / bharat

கிழக்கு லடாக்கில் எந்தப் பகுதியையும் இழக்க ராணுவம் அனுமதிக்காது- ஜெனரல் மனோஜ் பாண்டே!

கிழக்கு லடாக்கில் எந்தப் பகுதியையும் இழக்க ராணுவம் அனுமதிக்காது என ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே கூறினார்.

author img

By

Published : May 1, 2022, 5:16 PM IST

Manoj Pande
Manoj Pande

புதுடெல்லி: நாட்டின் தலைமை ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே சனிக்கிழமை (ஏப்.30) பதவியேற்ற நிலையில் இன்று (மே1) முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கிழக்கு லடாக்கில் ராணுவ பாதுகாப்பு குறித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவம் பாதுகாப்பில் உள்ளது. சீனாவின் ஊடுருவல் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தப் படை போதும்.

மேலும், “கிழக்கு லடாக்கில் எந்தப் பகுதியையும் இழக்க ராணுவம் அனுமதிக்காது” என்றார். தொடர்ந்து பேசிய மனோஜ் பாண்டே, “கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் ஒரு அச்சுறுத்தல் மதிப்பீட்டை மேற்கொண்டோம். அதன்படி படைகளை மறுசீரமைத்து மறுசீரமைத்துள்ளோம்.

எல்லை கட்டுப்பாடு கோட்டை பொருத்தவரை நமது துருப்புக்கள் மிகவும் உறுதியான முறையில் தயார் நிலையில் உள்ளன. தற்போது எங்கள் கவனம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் உள்ளது. குறிப்பாக செயல்பாட்டு மற்றும் தளவாட தேவைகளில் கவனம் செலுத்திவருகிறோம்.

அதேநேரம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றத்தை தணிப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். இந்தப் பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதுதான் முதல் நோக்கம்” என்றார். பாகிஸ்தான் விவகாரம் குறித்து பேசிய பாண்டே, “கடந்த முறை ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள குடிமக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த உதவியது” என்றார்.

நாட்டின் 29ஆவது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே!

புதுடெல்லி: நாட்டின் தலைமை ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே சனிக்கிழமை (ஏப்.30) பதவியேற்ற நிலையில் இன்று (மே1) முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கிழக்கு லடாக்கில் ராணுவ பாதுகாப்பு குறித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவம் பாதுகாப்பில் உள்ளது. சீனாவின் ஊடுருவல் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தப் படை போதும்.

மேலும், “கிழக்கு லடாக்கில் எந்தப் பகுதியையும் இழக்க ராணுவம் அனுமதிக்காது” என்றார். தொடர்ந்து பேசிய மனோஜ் பாண்டே, “கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் ஒரு அச்சுறுத்தல் மதிப்பீட்டை மேற்கொண்டோம். அதன்படி படைகளை மறுசீரமைத்து மறுசீரமைத்துள்ளோம்.

எல்லை கட்டுப்பாடு கோட்டை பொருத்தவரை நமது துருப்புக்கள் மிகவும் உறுதியான முறையில் தயார் நிலையில் உள்ளன. தற்போது எங்கள் கவனம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் உள்ளது. குறிப்பாக செயல்பாட்டு மற்றும் தளவாட தேவைகளில் கவனம் செலுத்திவருகிறோம்.

அதேநேரம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றத்தை தணிப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். இந்தப் பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதுதான் முதல் நோக்கம்” என்றார். பாகிஸ்தான் விவகாரம் குறித்து பேசிய பாண்டே, “கடந்த முறை ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள குடிமக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த உதவியது” என்றார்.

நாட்டின் 29ஆவது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.