ETV Bharat / bharat

ராஜஸ்தான் சாலை விபத்தில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழப்பு

author img

By

Published : Nov 5, 2022, 8:33 PM IST

ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் சாலை விபத்தில்  2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழப்பு
ராஜஸ்தான் சாலை விபத்தில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்திலுள்ள பார்மெர் - சௌஹடான் சாலையில் நேற்று(நவ.4) ராணுவ டிரக் சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிலிருந்த 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பார்மெர் மாவட்ட ஆட்சியர் லோக் பந்து கூறுகையில், “பார்மெரில் ராணுவ பாதுகாப்பு பணிக்காக பிஎஸ்ஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அதில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேரை மேல்சிகிச்சைக்காக உயர்தர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்” என்றார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்திலுள்ள பார்மெர் - சௌஹடான் சாலையில் நேற்று(நவ.4) ராணுவ டிரக் சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிலிருந்த 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பார்மெர் மாவட்ட ஆட்சியர் லோக் பந்து கூறுகையில், “பார்மெரில் ராணுவ பாதுகாப்பு பணிக்காக பிஎஸ்ஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அதில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேரை மேல்சிகிச்சைக்காக உயர்தர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல்... மாந்திரீகம் காரணம்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.