ETV Bharat / bharat

இனி 28 நாள்கள் கிடையாது... 30 நாள்களுக்கு வேலிடிட்டிய மாத்துங்க... அதிரடி உத்தரவு...

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் மாதாந்திர ரீசார்ஜ் வேலிடிட்டி காலத்தை 28 நாள்களில் இருந்து 30 நாள்களாக நீட்டிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jan 28, 2022, 1:40 PM IST

பீரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துக்கு இனி 30 நாள்கள் வேலிடிட்டி!
பீரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துக்கு இனி 30 நாள்கள் வேலிடிட்டி!

டெல்லி: மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மூலம் 28 நாள்களுக்கு மட்டுமே வேலிடிட்டி வழங்கப்பட்டு வருகின்றன. இந்த காலத்தை நீட்டிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒரு மாதம் செல்லுபடியாகும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் (Prepaid recharge) திட்டங்களை அறிவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 28 நாள்கள் மட்டுமே வேலிடிட்டியை வழங்குகின்றன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் 28 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வரை செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும்.

அத்துடன் இந்த 30 நாள்கள் செல்லுபடியாகும் திட்ட விவரங்களை, 60 நாள்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு திட்ட வவுச்சர், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர், ஒரு காம்போ வவுச்சரையாவது சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து திட்டமும் 30 நாள்களுக்கு செல்லுபடியாகும்படி இருக்க வேண்டும். இதனால் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: 'தி வாரியர்' இந்தி டப்பிங் உரிமை பெரும் விலைக்கு விற்பனை!

டெல்லி: மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மூலம் 28 நாள்களுக்கு மட்டுமே வேலிடிட்டி வழங்கப்பட்டு வருகின்றன. இந்த காலத்தை நீட்டிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒரு மாதம் செல்லுபடியாகும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் (Prepaid recharge) திட்டங்களை அறிவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 28 நாள்கள் மட்டுமே வேலிடிட்டியை வழங்குகின்றன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் 28 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வரை செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும்.

அத்துடன் இந்த 30 நாள்கள் செல்லுபடியாகும் திட்ட விவரங்களை, 60 நாள்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு திட்ட வவுச்சர், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர், ஒரு காம்போ வவுச்சரையாவது சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து திட்டமும் 30 நாள்களுக்கு செல்லுபடியாகும்படி இருக்க வேண்டும். இதனால் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: 'தி வாரியர்' இந்தி டப்பிங் உரிமை பெரும் விலைக்கு விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.