ETV Bharat / bharat

கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 3 விவசாயிகள் உயிரிழப்பு!

பாட்னா: கல்யாண்புராவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

author img

By

Published : Nov 14, 2020, 5:07 PM IST

Three farmers killed
Three farmers killed

குஜராத் மாநிலம் கல்யாண்புராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் பாய்ந்தது.

அதனால் அங்கு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் சம்பயிடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த ராதாபூர் காவல்துறையினர், சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், "உயிரிழந்த விவாசாயிகள் அதே பகுதியைச் சேர்ந்த தனபாய் தாகூர் (30), பிரபு தாகூர்(35), நாப் தாக்கூர்(40) என்பதும், விபத்து ஏற்படுத்திய கார் குட்ச் பகுதியிலிருந்து பலன்பூர் நோக்கி புறப்பட்டதும்" தெரியவந்தது.

இதையும் படிங்க: மீன்பாடி வண்டி மீது மினிலாரி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் கல்யாண்புராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் பாய்ந்தது.

அதனால் அங்கு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் சம்பயிடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த ராதாபூர் காவல்துறையினர், சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், "உயிரிழந்த விவாசாயிகள் அதே பகுதியைச் சேர்ந்த தனபாய் தாகூர் (30), பிரபு தாகூர்(35), நாப் தாக்கூர்(40) என்பதும், விபத்து ஏற்படுத்திய கார் குட்ச் பகுதியிலிருந்து பலன்பூர் நோக்கி புறப்பட்டதும்" தெரியவந்தது.

இதையும் படிங்க: மீன்பாடி வண்டி மீது மினிலாரி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.