ETV Bharat / bharat

மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 4:27 PM IST

Margadarsi chit fund shares transfer case: மார்கதர்சி சிட் பண்ட் பங்குகள் பரிமாற்ற வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்ற சிஐடி காவலர்கள் விசாரணை செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

supreme-court-margadarsi-chit-fund-shares-transfer-case
மார்கதர்சி சிட் பண்ட் எதிராக தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்ததாக அதன் நிறுவனத் தலைவர் ராமோஜி ராவ் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் ஆகியோர் மீது யூரி ரெட்டி அளித்த புகாரின் பேரில் ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்த ஆந்திர உயர் நீதிமன்றம் மார்கதர்சி சிட் பண்ட் தொடர்பான சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. எனவே ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்ய உரிமை உள்ளதா? மேலும் எவ்வாறு அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், யூரி ரெட்டி ஆந்திர சிஐடியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், மார்கதர்சி சிட் பண்ட் பங்குகள் பரிமாற்றம் செய்வதற்குக் கையெழுத்துப் போட்டுள்ளார். அச்சுறுத்தலின் கீழ் கையெழுத்துப் போடவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது என ஆந்திர உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மார்கதர்சி மீதான வழக்குப் பதிவு விவகாரத்தில் ஆந்திர சிஐடியின் அதிகார வரம்பு குறித்தும் கேள்வி எழுப்பியது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனம் மீதான அனைத்து தரப்பு விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை 8 வாரத்திற்கு நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யூரி ரெட்டி ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்எல்பி(SLP) வழக்கு தாக்கல் செய்தார். இதில், "ஆந்திர உயர் நீதிமன்றம் மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்த வழக்கு விசாரணையை ஆந்திர சிஐடி விசாரணை செய்வதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அதனை ரத்து செய்து நிறுவனத்தின் மீது விசாரணை தொடங்க உத்தரவிட வேண்டும்." எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவ.20) விசாரணைக்கு வந்தது. அப்போது யூரி ரெட்டி தரப்பில், "எங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், சிஐடி விசாரணை நிறுத்தம் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மார்கதர்சி சிட் பண்ட் பங்குகள் பரிமாற்ற வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எப்போது எனக் கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில் டிசம்பர் 6ஆம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "இந்த வழக்கை மனுதாரர் திரும்பப் பெறவில்லை என்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்ததாக அதன் நிறுவனத் தலைவர் ராமோஜி ராவ் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் ஆகியோர் மீது யூரி ரெட்டி அளித்த புகாரின் பேரில் ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்த ஆந்திர உயர் நீதிமன்றம் மார்கதர்சி சிட் பண்ட் தொடர்பான சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. எனவே ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்ய உரிமை உள்ளதா? மேலும் எவ்வாறு அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், யூரி ரெட்டி ஆந்திர சிஐடியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், மார்கதர்சி சிட் பண்ட் பங்குகள் பரிமாற்றம் செய்வதற்குக் கையெழுத்துப் போட்டுள்ளார். அச்சுறுத்தலின் கீழ் கையெழுத்துப் போடவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது என ஆந்திர உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மார்கதர்சி மீதான வழக்குப் பதிவு விவகாரத்தில் ஆந்திர சிஐடியின் அதிகார வரம்பு குறித்தும் கேள்வி எழுப்பியது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனம் மீதான அனைத்து தரப்பு விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை 8 வாரத்திற்கு நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யூரி ரெட்டி ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்எல்பி(SLP) வழக்கு தாக்கல் செய்தார். இதில், "ஆந்திர உயர் நீதிமன்றம் மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்த வழக்கு விசாரணையை ஆந்திர சிஐடி விசாரணை செய்வதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அதனை ரத்து செய்து நிறுவனத்தின் மீது விசாரணை தொடங்க உத்தரவிட வேண்டும்." எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவ.20) விசாரணைக்கு வந்தது. அப்போது யூரி ரெட்டி தரப்பில், "எங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், சிஐடி விசாரணை நிறுத்தம் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மார்கதர்சி சிட் பண்ட் பங்குகள் பரிமாற்ற வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எப்போது எனக் கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில் டிசம்பர் 6ஆம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "இந்த வழக்கை மனுதாரர் திரும்பப் பெறவில்லை என்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.