ETV Bharat / bharat

விவேகா மரணம் ஆந்திர முதலமைச்சருக்கு முன்கூட்டியே எப்படி தெரியும்? - சிபிஐ-க்கு சுனிதா கேள்வி

author img

By

Published : May 27, 2023, 10:57 PM IST

விவேகா மரணம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முன்பே தெரியும் என சிபிஐ கூறிய நிலையில் கடப்பா எம்பி அவினாஷ் ரெட்டிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என முன்னாள் எம்பி விவேகா ரெட்டியின் மகள் சுனிதா கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஆந்திர பிரதேசம்: முன்னாள் எம்பி விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி, தனது தந்தையின் மரணம் குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகர் ரெட்டிக்கு எப்படி முன்கூட்டியே தெரியும் என்பதை சிபிஐ விளக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். விவேகாவின் தனிப்பட்ட உதவியாளர் மூலம் தெரியப்படுத்தப்படுவதற்கு முன்பே விவேகாவின் மரணம் குறித்து ஜெகனுக்குத் தெரிவிக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதனை மேற்கோள்காட்டி, சுனிதாவின் வழக்கறிஞர் எல்.ரவிச்சந்தர், சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் கடப்பா எம்பி அவினாஷ் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். சிபிஐயின் சமர்ப்பிப்பில் ஜெகனிடம் முன்கூட்டியே தகவல்கள் இருந்ததாகவும், அதில் அவினாஷுக்கு பங்கு இருந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைக்காமல் புதிய கோட்பாடுகளை புகுத்தி அவினாஷ் மைண்ட் கேம் விளையாடுவதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். சிபிஐ விசாரணைக்கு இடையூறு விளைவிக்க அவினாஷ் ரெட்டியின் ஆதரவாளர்கள் கர்னூலில் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

முரண்பாடாக, விசாரணை நிறுவனம் சம்மன் அனுப்பியபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையில் சேருவதற்குப் பதிலாக இவ்வளவு காலமாக தங்களை ஏன் கைது செய்யவில்லை என கேலி செய்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, முன் ஜாமீன் மனு நீதிபதி எம்.லட்சுமணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவேகா மாரடைப்பால் இறந்ததாக அவினாஷ் காவல் துறையினருக்கு தொலைபேசியில் தெரிவித்ததாக சுனிதா தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: Arvind kejriwal:தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் - அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்பு!

குற்றம் நடந்த இடத்தில் அவினாஷ் மற்றும் பலர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. சிபிஐ விசாரணையில் தவறு இருப்பதாக அவினாஷ் வழக்கறிஞர் உமாமகேஸ்வர ராவ் வாதிட்டார். கொலை விசாரணை முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் காவல் துறையும், எஸ் ஐ டியும் வழக்கு குறித்த ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் அவினாஷ் ரெட்டியை குற்றம் சாட்டப்பட்டவர் என முத்திரை குத்துகின்றனர்.

மனுதாரரின் தந்தை ஒய்.எஸ். பாஸ்கர் ரெட்டி ஆதாரங்களை சிதைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் அதே குற்றச்சாட்டில் அவினாஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவினாஷ் தரப்பு வழக்கறிஞர் தஸ்தகிரியின் அறிக்கையைத் தவிர அவரது கட்சிக்காரருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. தஸ்தாகிரியை சிபிஐ செல்லப்பிள்ளை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை கொலையில் ஈடுபட்ட நால்வர் வெவ்வேறு காரணங்களைக் கொண்டிருந்தனர். பெங்களூரு நில தீர்வு தொடர்பான 8 கோடி ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு - எதிர்க்கட்சிகள் கூறிய காரணம் இதுதான்..

ஆந்திர பிரதேசம்: முன்னாள் எம்பி விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி, தனது தந்தையின் மரணம் குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகர் ரெட்டிக்கு எப்படி முன்கூட்டியே தெரியும் என்பதை சிபிஐ விளக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். விவேகாவின் தனிப்பட்ட உதவியாளர் மூலம் தெரியப்படுத்தப்படுவதற்கு முன்பே விவேகாவின் மரணம் குறித்து ஜெகனுக்குத் தெரிவிக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதனை மேற்கோள்காட்டி, சுனிதாவின் வழக்கறிஞர் எல்.ரவிச்சந்தர், சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் கடப்பா எம்பி அவினாஷ் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். சிபிஐயின் சமர்ப்பிப்பில் ஜெகனிடம் முன்கூட்டியே தகவல்கள் இருந்ததாகவும், அதில் அவினாஷுக்கு பங்கு இருந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைக்காமல் புதிய கோட்பாடுகளை புகுத்தி அவினாஷ் மைண்ட் கேம் விளையாடுவதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். சிபிஐ விசாரணைக்கு இடையூறு விளைவிக்க அவினாஷ் ரெட்டியின் ஆதரவாளர்கள் கர்னூலில் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

முரண்பாடாக, விசாரணை நிறுவனம் சம்மன் அனுப்பியபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையில் சேருவதற்குப் பதிலாக இவ்வளவு காலமாக தங்களை ஏன் கைது செய்யவில்லை என கேலி செய்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, முன் ஜாமீன் மனு நீதிபதி எம்.லட்சுமணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவேகா மாரடைப்பால் இறந்ததாக அவினாஷ் காவல் துறையினருக்கு தொலைபேசியில் தெரிவித்ததாக சுனிதா தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: Arvind kejriwal:தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் - அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்பு!

குற்றம் நடந்த இடத்தில் அவினாஷ் மற்றும் பலர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. சிபிஐ விசாரணையில் தவறு இருப்பதாக அவினாஷ் வழக்கறிஞர் உமாமகேஸ்வர ராவ் வாதிட்டார். கொலை விசாரணை முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் காவல் துறையும், எஸ் ஐ டியும் வழக்கு குறித்த ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் அவினாஷ் ரெட்டியை குற்றம் சாட்டப்பட்டவர் என முத்திரை குத்துகின்றனர்.

மனுதாரரின் தந்தை ஒய்.எஸ். பாஸ்கர் ரெட்டி ஆதாரங்களை சிதைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் அதே குற்றச்சாட்டில் அவினாஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவினாஷ் தரப்பு வழக்கறிஞர் தஸ்தகிரியின் அறிக்கையைத் தவிர அவரது கட்சிக்காரருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. தஸ்தாகிரியை சிபிஐ செல்லப்பிள்ளை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை கொலையில் ஈடுபட்ட நால்வர் வெவ்வேறு காரணங்களைக் கொண்டிருந்தனர். பெங்களூரு நில தீர்வு தொடர்பான 8 கோடி ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு - எதிர்க்கட்சிகள் கூறிய காரணம் இதுதான்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.