ETV Bharat / bharat

படகுகளில் பாடம் படிக்கும் மாணவர்கள் : பிகார் ஆசிரியர்களின் புதிய முயற்சி! - ஆசிரியர்களின் புதிய முயற்சி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகார் மாநிலத்தின் கதிஹாரில் உள்ள மாராலாண்ட் கிராமத்தில், மாணவர்களின் நலன் கருதி பங்கஜ் மற்றும் ரவீந்திரன் என்ற இரண்டு ஆசிரியர்களும், படகை தற்காலிக பள்ளிக்கூடங்களாக்கி மாணவர்களுக்கு படம் நடத்தி வருகின்றனர்.

படகு பள்ளிக்கூடம்
படகு பள்ளிக்கூடம்
author img

By

Published : Sep 6, 2021, 9:42 AM IST

கதிஹார்(பிகார்): வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாராலாண்ட் கிராமத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு ஒரு நிலப்பரப்பை கண்டுபிடிப்பதற்கு சிரமமான நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் படிப்பும் பொ்ன்னான நேரமும் விரையமாகக் கூடாது என்று இரண்டு ஆசிரியர்கள் ஒரு புதுமையான யோசனையை கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆசிரியர்கள் படகுகளை தற்காலிக பள்ளிக்கூடங்களாக மாற்றி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வருகின்றனர்.

இடுப்பளவிற்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும்போதிலும், மாணவர்களுக்கு கல்வி வழங்கும் ஆசிரியர்களின் வேட்கையை அதனால் குலைக்க முடியவில்லை. கடந்த ஜூன் மாதத்திலிருந்து பிகாரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இறந்தவர்களை புதைப்பதற்கு கூட வறண்ட நிலைத்தக் கண்டுபிடிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது பள்ளிகளைத் திறக்க பெரும் சிக்கலாக வெள்ளம் உருவெடுத்துள்ளது.

"இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதி. ஆறு மாதங்களுக்கு இங்கு தண்ணீர் இருக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு நிலம் வறண்டிருக்கும். இதனால் படகுகள்தான் எங்களுக்கான ஒரே வழி. படகுகளுடன் எங்களுக்கு ஒரு ஆழமான உறவு உண்டு. இங்குள்ள குழந்தைகளுக்கு தண்ணீரைக் கண்டு பயம் இல்லை. அது ஒரு பழக்கமாகிவிட்டது. 12 நாள்களுக்கு முன்பு நாங்கள் இங்கு வரும்போது நாங்கள் நனைந்துவிடும் அளவுக்கு தண்ணீர் இருந்தது . இப்போது பரவாயில்லை" என்கிறார் பங்கஜ் குமார் சாஹ்.

இடப்பாற்றாக்குறையும் மாணவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது முன்பு 3-4 பேர்தான் படிக்க வந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் தங்ளின் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்பட வில்லை என்கிறார்கள் மாணவர்கள்.

இதுகுறித்து, அமீர்லால் குமார் என்ற மாணவர் கூறுகையில், நான் மெட்ரிகுலேஷன் படித்துவருகிறேன். ஊரடங்கு காரணமாக எங்களுடைய பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை. எங்களுடைய சீனியர்கள் பாடத்திட்டங்களை முடிக்க அவர்கள் எங்களுக்கு பாடம் எடுப்பதாக கூறினார்கள்.

ஆனால் இடம் இல்லை அதனால் படகுகளில் வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தனர். படகுகளுடன் எங்களுக்கு அதிகமான நெருக்கம் உண்டு . அதனால் படகுகளைப் பார்த்து பயம் இல்லை. நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன். அதனால் நான் கட்டாயம் படிக்க வேண்டும் என்றார். வெள்ளத்தின் அலைகளில் படகு ஆடிக்கொண்டே இருக்கிறது. மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்

இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பாடம் - சர்ச்சையில் ம.பி. அரசு

கதிஹார்(பிகார்): வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாராலாண்ட் கிராமத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு ஒரு நிலப்பரப்பை கண்டுபிடிப்பதற்கு சிரமமான நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் படிப்பும் பொ்ன்னான நேரமும் விரையமாகக் கூடாது என்று இரண்டு ஆசிரியர்கள் ஒரு புதுமையான யோசனையை கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆசிரியர்கள் படகுகளை தற்காலிக பள்ளிக்கூடங்களாக மாற்றி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வருகின்றனர்.

இடுப்பளவிற்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும்போதிலும், மாணவர்களுக்கு கல்வி வழங்கும் ஆசிரியர்களின் வேட்கையை அதனால் குலைக்க முடியவில்லை. கடந்த ஜூன் மாதத்திலிருந்து பிகாரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இறந்தவர்களை புதைப்பதற்கு கூட வறண்ட நிலைத்தக் கண்டுபிடிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது பள்ளிகளைத் திறக்க பெரும் சிக்கலாக வெள்ளம் உருவெடுத்துள்ளது.

"இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதி. ஆறு மாதங்களுக்கு இங்கு தண்ணீர் இருக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு நிலம் வறண்டிருக்கும். இதனால் படகுகள்தான் எங்களுக்கான ஒரே வழி. படகுகளுடன் எங்களுக்கு ஒரு ஆழமான உறவு உண்டு. இங்குள்ள குழந்தைகளுக்கு தண்ணீரைக் கண்டு பயம் இல்லை. அது ஒரு பழக்கமாகிவிட்டது. 12 நாள்களுக்கு முன்பு நாங்கள் இங்கு வரும்போது நாங்கள் நனைந்துவிடும் அளவுக்கு தண்ணீர் இருந்தது . இப்போது பரவாயில்லை" என்கிறார் பங்கஜ் குமார் சாஹ்.

இடப்பாற்றாக்குறையும் மாணவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது முன்பு 3-4 பேர்தான் படிக்க வந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் தங்ளின் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்பட வில்லை என்கிறார்கள் மாணவர்கள்.

இதுகுறித்து, அமீர்லால் குமார் என்ற மாணவர் கூறுகையில், நான் மெட்ரிகுலேஷன் படித்துவருகிறேன். ஊரடங்கு காரணமாக எங்களுடைய பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை. எங்களுடைய சீனியர்கள் பாடத்திட்டங்களை முடிக்க அவர்கள் எங்களுக்கு பாடம் எடுப்பதாக கூறினார்கள்.

ஆனால் இடம் இல்லை அதனால் படகுகளில் வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தனர். படகுகளுடன் எங்களுக்கு அதிகமான நெருக்கம் உண்டு . அதனால் படகுகளைப் பார்த்து பயம் இல்லை. நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன். அதனால் நான் கட்டாயம் படிக்க வேண்டும் என்றார். வெள்ளத்தின் அலைகளில் படகு ஆடிக்கொண்டே இருக்கிறது. மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்

இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பாடம் - சர்ச்சையில் ம.பி. அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.