வாஷிங்டன்: அமெரிக்காவின் இன்டியானாபோலிஸ் நகரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று இயங்கிவருகிறது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 16) விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் பல பேர் படுகாயமைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் நாளொன்றுக்கு 15 காவலர்கள்வரை கரோனா பாதிப்பு - காவல் துறை ஆணையர்