ETV Bharat / bharat

புத்தாண்டை முன்னிட்டு பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

author img

By

Published : Dec 31, 2020, 6:29 PM IST

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இன்று முதல் இரவு நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளன.

இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆண்டின் இறுதி நாள் அன்று பொது இடங்களில் மக்கள் கூடி கொண்டாடுவது வழக்கம். ஆனால் கரோனா பரவல் அச்சம் காரணமாக 2020ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று (டிச.31) கடற்கரைகள், கேலி கூடங்கள் என பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், மணிப்பூர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புத்தாண்டு மாலையான இன்று முதல் இரவு நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளன.

இதுதொடர்பாக, அந்தந்த மாநிலங்களிலுள்ள உணவு விடுதிகள், கேளிக்கை கூடங்கள், கூட்டரங்குகள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இரவு நேர ஊரடங்கானது, இன்று இரவு 10 முதல் நாளை அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடற்கரைகள், பூங்காக்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லியில், இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று இரவு முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று இரவு முதல் ஜனவரி 5 வரையும், ராஜஸ்தானில் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரையும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கரோனா தொற்று எண்ணிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆண்டின் இறுதி நாள் அன்று பொது இடங்களில் மக்கள் கூடி கொண்டாடுவது வழக்கம். ஆனால் கரோனா பரவல் அச்சம் காரணமாக 2020ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று (டிச.31) கடற்கரைகள், கேலி கூடங்கள் என பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், மணிப்பூர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புத்தாண்டு மாலையான இன்று முதல் இரவு நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளன.

இதுதொடர்பாக, அந்தந்த மாநிலங்களிலுள்ள உணவு விடுதிகள், கேளிக்கை கூடங்கள், கூட்டரங்குகள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இரவு நேர ஊரடங்கானது, இன்று இரவு 10 முதல் நாளை அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடற்கரைகள், பூங்காக்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லியில், இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று இரவு முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று இரவு முதல் ஜனவரி 5 வரையும், ராஜஸ்தானில் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரையும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கரோனா தொற்று எண்ணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.