ETV Bharat / bharat

பெகாசஸ் உளவு விவகார வழக்கு ஒத்தி வைப்பு

author img

By

Published : Aug 5, 2021, 1:24 PM IST

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.

Supreme Court
Supreme Court

டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எதிர்க் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று(ஆக்ஸட் 5) நீதிபதிகள் ரமணா, சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பத்திரிகையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 'பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், நீதிமன்ற அலுவலர்கள், கல்வியாளர்களின் செல்போன் தகவல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை, அதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக ஸ்பைவேர் மென்பொருள் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு அல்ல என்றும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மனுதாரர்களின் மனுக்களை மத்திய அரசிடம் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பாக வரும் செவ்வாய் கிழமைக்குள் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எதிர்க் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று(ஆக்ஸட் 5) நீதிபதிகள் ரமணா, சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பத்திரிகையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 'பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், நீதிமன்ற அலுவலர்கள், கல்வியாளர்களின் செல்போன் தகவல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை, அதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக ஸ்பைவேர் மென்பொருள் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு அல்ல என்றும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மனுதாரர்களின் மனுக்களை மத்திய அரசிடம் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பாக வரும் செவ்வாய் கிழமைக்குள் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.