ETV Bharat / bharat

சந்திரபாபு உடல்நலம் குறித்து அறிக்கை வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 10:22 PM IST

தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து அரசு மருத்துவர்களின் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சந்திரபாபு உடல்நலம் குறித்து வெளியான ஆய்வு அறிக்கை
சந்திரபாபு உடல்நலம் குறித்து வெளியான ஆய்வு அறிக்கை

ஆந்திர மாநிலத்தின் திறன் மேம்பாடு கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டு தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திர பாபு நாயுடு கடந்த செப்டம்பர் மாதம் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த சிறையில் இருந்த ஒரு சிறைவாசி டெங்குவால் உயிரிழந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கும் நோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது மகன் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து, அரசு மருத்துவர்களின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வட்டாரங்களில் சார்பில், சந்திரபாபு குறித்து வெளிவரும் தகவல்கள் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களின் அறிக்கைக்கு மாறுபட்டு இருப்பதால், சந்திரபாபுவின் குடும்பத்தார்கள், கட்சிக்காரர்கள் மற்றும் அவரின் தனி மருத்துவர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

சந்திரபாபுவை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், குளிர்ச்சியான காலநிலையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்து, ஐந்து வகையான மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருந்த நிலையில், சந்திர பாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட இரண்டு அரசு மருத்துவர்களின் அறிக்கை வெளிவந்துள்ளது.

அவரது மார்பு பகுதிகள், கழுத்துப் பகுதி, கன்னங்கள், முதுகுப் பகுதிகள் மற்றும் உடலின் மற்ற சிலப்பகுதிகளில் அவருக்கு படைநோய் மற்றும் தோல் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை பரிசோதிக்க, இந்த மாதம் அக்.14ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், ஜிஜிஹெச் தலைமை கண்காணிப்பாளரிடம் இருந்து உத்தரவு வந்ததாக உதவிப் பேராசிரியர்கள் ஜி.சூர்யநாராயணா மற்றும் வி.சுனிதா தேவி ஆகியோர் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அன்று மாலை 5 மணியில் இருந்து 5.30 மணி வரையில் சந்திரபாபு நாயுடுவின் பரிசோதனை நடைபெற்றதாக அறிக்கையில் தெரிவித்தனர். ஆய்வின் அடிப்படையில் மாலை 6 மணியளவில், சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்த தகவல்கள் ஆவணமாக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவரின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதில், அவரது உடலை குளிர்ச்சி படுத்த வழி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதற்காக, அவரது உடலை குளிர்ச்சிப்படுத்துவதற்கு ஐந்து வகையான மருந்துகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதில் இரண்டு வகையான களிம்புகள், இரண்டு வகையில் மாத்திரைகள் மற்றும் ஒரு லோஷன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் ஆய்வு அறிக்கை வெளியானதையடுத்து, சந்திரபாபுவின் தனி மருத்துவர் அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், சந்திரபாபு நாயுடுவின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் ஆய்வும், அது குறித்து அதிகாரிகளின் விளக்கமும் முற்றிலும் வேறுபட்டுள்ளது.

கடும் வெயிலினால், நீரிழப்பால் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். முன்னதாக அவர் 'ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி' (Hypertrophic cardiomyopathy) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதனால், அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். இது அவருடைய இதயத்தை பாதிக்கக்கூடும் என அவரது தனி மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படாத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உடல் நலம் குறித்து சிறை அதிகாரிகளின் இந்த பொய் தகவல்களால், அவரது குடும்பத்தாரும், ஆதரவாளர்களும் பதற்றமடைந்துள்ளனர். மேலும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் போ என்றால்.. சட்டமன்றம்.. பாராளுமன்றம் எதற்கு?" - சீமான் ஆவேசம்!

ஆந்திர மாநிலத்தின் திறன் மேம்பாடு கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டு தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திர பாபு நாயுடு கடந்த செப்டம்பர் மாதம் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த சிறையில் இருந்த ஒரு சிறைவாசி டெங்குவால் உயிரிழந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கும் நோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது மகன் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து, அரசு மருத்துவர்களின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வட்டாரங்களில் சார்பில், சந்திரபாபு குறித்து வெளிவரும் தகவல்கள் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களின் அறிக்கைக்கு மாறுபட்டு இருப்பதால், சந்திரபாபுவின் குடும்பத்தார்கள், கட்சிக்காரர்கள் மற்றும் அவரின் தனி மருத்துவர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

சந்திரபாபுவை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், குளிர்ச்சியான காலநிலையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்து, ஐந்து வகையான மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருந்த நிலையில், சந்திர பாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட இரண்டு அரசு மருத்துவர்களின் அறிக்கை வெளிவந்துள்ளது.

அவரது மார்பு பகுதிகள், கழுத்துப் பகுதி, கன்னங்கள், முதுகுப் பகுதிகள் மற்றும் உடலின் மற்ற சிலப்பகுதிகளில் அவருக்கு படைநோய் மற்றும் தோல் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை பரிசோதிக்க, இந்த மாதம் அக்.14ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், ஜிஜிஹெச் தலைமை கண்காணிப்பாளரிடம் இருந்து உத்தரவு வந்ததாக உதவிப் பேராசிரியர்கள் ஜி.சூர்யநாராயணா மற்றும் வி.சுனிதா தேவி ஆகியோர் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அன்று மாலை 5 மணியில் இருந்து 5.30 மணி வரையில் சந்திரபாபு நாயுடுவின் பரிசோதனை நடைபெற்றதாக அறிக்கையில் தெரிவித்தனர். ஆய்வின் அடிப்படையில் மாலை 6 மணியளவில், சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்த தகவல்கள் ஆவணமாக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவரின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதில், அவரது உடலை குளிர்ச்சி படுத்த வழி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதற்காக, அவரது உடலை குளிர்ச்சிப்படுத்துவதற்கு ஐந்து வகையான மருந்துகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதில் இரண்டு வகையான களிம்புகள், இரண்டு வகையில் மாத்திரைகள் மற்றும் ஒரு லோஷன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் ஆய்வு அறிக்கை வெளியானதையடுத்து, சந்திரபாபுவின் தனி மருத்துவர் அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், சந்திரபாபு நாயுடுவின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் ஆய்வும், அது குறித்து அதிகாரிகளின் விளக்கமும் முற்றிலும் வேறுபட்டுள்ளது.

கடும் வெயிலினால், நீரிழப்பால் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். முன்னதாக அவர் 'ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி' (Hypertrophic cardiomyopathy) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதனால், அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். இது அவருடைய இதயத்தை பாதிக்கக்கூடும் என அவரது தனி மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படாத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உடல் நலம் குறித்து சிறை அதிகாரிகளின் இந்த பொய் தகவல்களால், அவரது குடும்பத்தாரும், ஆதரவாளர்களும் பதற்றமடைந்துள்ளனர். மேலும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் போ என்றால்.. சட்டமன்றம்.. பாராளுமன்றம் எதற்கு?" - சீமான் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.