குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து, டெல்லி சிறப்பு பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானமாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் டெல்லி போலீஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தீப் சித்து, பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரிக்யா குப்தா முன் ஆஜர்படுத்தப்பட்டார் இந்த, வழக்கை விசாரித்த நீதிபதி, தீப் சித்துவை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு பதிலடி தர தயாராகும் காங்கிரஸ்!