ETV Bharat / bharat

ராஜஸ்தானில் போதை மாத்திரைகள் கடத்தியவர் கைது!

author img

By

Published : Apr 5, 2021, 6:16 AM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் போதை மாத்திரைகள் கடத்தியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராஜஸ்தானில் போதை மாத்திரைகள் கடத்திய நபர் கைது
ராஜஸ்தானில் போதை மாத்திரைகள் கடத்திய நபர் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரமடோல் என்னும் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் போதைப் பொருள் கடத்தி வந்த வாகனத்தை மடக்கினர்.

அப்போது, காவல் துறையினரைக் கண்டவுடன் வாகனத்திலிருந்த இரண்டு பேர் தப்பியோடினர். அதில் ஒருவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் கோபால் பிஷ்னோய் என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 25 ஆயிரம் போதை மாத்திரைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விலை உயரந்த போதைப்பொருள் விற்பனை: பெண் உள்பட இருவர் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரமடோல் என்னும் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் போதைப் பொருள் கடத்தி வந்த வாகனத்தை மடக்கினர்.

அப்போது, காவல் துறையினரைக் கண்டவுடன் வாகனத்திலிருந்த இரண்டு பேர் தப்பியோடினர். அதில் ஒருவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் கோபால் பிஷ்னோய் என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 25 ஆயிரம் போதை மாத்திரைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விலை உயரந்த போதைப்பொருள் விற்பனை: பெண் உள்பட இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.