ETV Bharat / bharat

'மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்' - ராகுல் கண்டனம்

author img

By

Published : Jun 6, 2021, 10:22 AM IST

ஜி.பி. பண்ட் மருத்துவமனையின் சுற்றறிக்கைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Rahul condemns GP Bund Hospital
Rahul condemns GP Bund Hospital

டெல்லி ஜி.பி. பண்ட் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மலையாளத்தில் பேசக் கூடாது என மருத்துவமனை நிர்வாகம் அனைத்துச் செவிலியருக்கும் சுற்றிறிக்கை அனுப்பியது.

அந்த சுற்றறிக்கையில், "மருத்துவமனையில் செவிலியர் மலையாளத்தில் பேசக் கூடாது; இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில்,"மற்ற இந்திய மொழிகளைப் போலவே மலையாளமும் இந்திய மொழி! மொழி பாகுப்பாட்டை நிறுத்துங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலமாகவே மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் மருத்துவமனையின் இந்தச் சுற்றறிக்கை வலுத்த எதிர்ப்பை பெற்றுள்ளது.

டெல்லி ஜி.பி. பண்ட் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மலையாளத்தில் பேசக் கூடாது என மருத்துவமனை நிர்வாகம் அனைத்துச் செவிலியருக்கும் சுற்றிறிக்கை அனுப்பியது.

அந்த சுற்றறிக்கையில், "மருத்துவமனையில் செவிலியர் மலையாளத்தில் பேசக் கூடாது; இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில்,"மற்ற இந்திய மொழிகளைப் போலவே மலையாளமும் இந்திய மொழி! மொழி பாகுப்பாட்டை நிறுத்துங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலமாகவே மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் மருத்துவமனையின் இந்தச் சுற்றறிக்கை வலுத்த எதிர்ப்பை பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.