ETV Bharat / bharat

தலைக்கவசம் இன்றி பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்!

author img

By

Published : Jan 28, 2021, 7:23 PM IST

புதுச்சேரி: தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் நபருக்கு 100 ரூபாயாக இருந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது என்று புதுச்சேரி போக்குவரத்து துறை செயலர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி
புதுச்சேரி

புதுச்சேரி போக்குவரத்து செயலர் அசோக்குமார், அத்துறை அலுவலர்கள் இன்று (ஜன. 28) தலைமைச் செயலர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய செயலர், “மோட்டார் வாகனங்கள் திருத்தச்சட்டம் 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் முக்கிய குறிக்கோள் குற்றங்களுக்கான ஆதாரங்கள் அதிகரிப்பது, மோட்டார் வாகன விதிகளை அதிகளவில் பின்பற்றுவதை உறுதிசெய்வதாகும்.
திருத்தப்பட்ட அபராதங்கள் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த போதிலும் புதுச்சேரி அரசாங்கத்தின் அமலாக்க அலுவலர்கள், அபராதம் கூட்டவும், அபராதம் வசூலிக்கவும் முடியவில்லை. எனவே அபராதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை” என்றார்.

புதுச்சேரி போக்குவரத்து செயலர் அசோக்குமார் செய்தியாளர் சந்திப்பு
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பது, வாகனங்களில் படியில் பயணம் செய்வது, நான்கு சக்கர வாகனங்களில் கண்ணாடிகளில் கறுப்பு திரை ஓட்டுதல், விதிகளை மீறிய வாகனம் எண் பலகை, வேக கட்டுப்பாடு கருவி ஏற்ற வாகனம், முதலுதவி பெட்டி இல்லாத வாகனம் பள்ளி பேருந்துகளில் தீயணைக்கும் தீயணைப்பான் இல்லாத வாகனம், பல குற்றங்களுக்கு பழைய அபராதா கட்டணம் ரூபாய் 100 முதல் அதற்குமேல் 300 ரூபாய் கட்டண விதிக்கப்பட்டிருந்தது.

இது தற்போது புதிய அபராத கட்டணமாக முதல் முறை குற்றத்திற்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும் இரண்டாவது முறை, அதற்கு மேல் குற்றத்திற்கு ரூபாய் 500 முதல் 1000 ரூபாய் வரை புதிய அபராத கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நான்கு சக்கர வாகனத்தில் இருக்கை பெல்ட் அணியாமல் அமர்ந்து இருப்பவருக்கு குற்றத்திற்கு ரூபாய் 100 இருந்தது. தற்போது புதிதாக ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல் தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்தால் ரூபாய் ஆயிரமும், மூன்று மாதத்திற்கு ஓட்டுநர் உரிமை தடை செய்யப்படும் என்று திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அபராத கட்டணத்தை அவர் வெளியிட்டார். மேலும் பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி போக்குவரத்து செயலர் அசோக்குமார், அத்துறை அலுவலர்கள் இன்று (ஜன. 28) தலைமைச் செயலர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய செயலர், “மோட்டார் வாகனங்கள் திருத்தச்சட்டம் 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் முக்கிய குறிக்கோள் குற்றங்களுக்கான ஆதாரங்கள் அதிகரிப்பது, மோட்டார் வாகன விதிகளை அதிகளவில் பின்பற்றுவதை உறுதிசெய்வதாகும்.
திருத்தப்பட்ட அபராதங்கள் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த போதிலும் புதுச்சேரி அரசாங்கத்தின் அமலாக்க அலுவலர்கள், அபராதம் கூட்டவும், அபராதம் வசூலிக்கவும் முடியவில்லை. எனவே அபராதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை” என்றார்.

புதுச்சேரி போக்குவரத்து செயலர் அசோக்குமார் செய்தியாளர் சந்திப்பு
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பது, வாகனங்களில் படியில் பயணம் செய்வது, நான்கு சக்கர வாகனங்களில் கண்ணாடிகளில் கறுப்பு திரை ஓட்டுதல், விதிகளை மீறிய வாகனம் எண் பலகை, வேக கட்டுப்பாடு கருவி ஏற்ற வாகனம், முதலுதவி பெட்டி இல்லாத வாகனம் பள்ளி பேருந்துகளில் தீயணைக்கும் தீயணைப்பான் இல்லாத வாகனம், பல குற்றங்களுக்கு பழைய அபராதா கட்டணம் ரூபாய் 100 முதல் அதற்குமேல் 300 ரூபாய் கட்டண விதிக்கப்பட்டிருந்தது.

இது தற்போது புதிய அபராத கட்டணமாக முதல் முறை குற்றத்திற்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும் இரண்டாவது முறை, அதற்கு மேல் குற்றத்திற்கு ரூபாய் 500 முதல் 1000 ரூபாய் வரை புதிய அபராத கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நான்கு சக்கர வாகனத்தில் இருக்கை பெல்ட் அணியாமல் அமர்ந்து இருப்பவருக்கு குற்றத்திற்கு ரூபாய் 100 இருந்தது. தற்போது புதிதாக ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல் தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்தால் ரூபாய் ஆயிரமும், மூன்று மாதத்திற்கு ஓட்டுநர் உரிமை தடை செய்யப்படும் என்று திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அபராத கட்டணத்தை அவர் வெளியிட்டார். மேலும் பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.